மேலும் அறிய

அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு  கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு.. அதிர்ச்சி..

சைல்டு லைனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி உரிய அறிக்கை பெற்று கார்த்திகை சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு  கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் புகார். தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சைல்ட் லைன் எண்ணிற்கு அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதே போன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணை குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி என்பவர் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஏழுக்கும் மேற்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரியின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆதமங்கலம் செல்வபுரம் மூலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி என்பவர் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கார்த்திகை சாமி கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி விசாரணை அறிக்கையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜனிடம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகை சாமி என்பவர் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கணித கார்த்திகை சாமி தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திகை சாமிக்கும் தலைமை ஆசிரியருக்கும் ஏற்கனவே பலமுறை கருத்து வேறுபாட்டால் பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது எப்படி இருப்பினும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும்போது உடனடியாக மாணவர்கள் சைல்ட் லைன் ஹெல்ப் எண்ணான 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரையடுத்து சைல்டு லைனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை பெற்று கார்த்திகை சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget