மேலும் அறிய

மீன்வளத்துறைக்கு எதிராக 29ஆம்தேதி ஈசிஆர் சாலையில் மறியல் - தஞ்சை மல்லிப்பட்டினம் மீனவர்கள் அறிவிப்பு

’’தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாக கூறி மீனவகர்களை மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பதாக புகார்’’

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க  ஆலோசனை கூட்டம்   மல்லிப்பட்டினம் துறைமுக கூட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர்  தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க தலைவர் டி.செல்வ கிளி,  மல்லிப்பட்டினம் வடக்கு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஹபீப் முகமது, செயலாளர் சாகுல்ஹமீது, மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெரு மீனவர் சங்க செயலாளர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று விசைப்படகுகள் டீசல் விலை ஏற்றத்தாலும், நாட்டுப் படகுகள் விசைப்படகு செல்லும் நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி அனைத்து நாட்களிலும் தொழில் புரிவதால் விசைப்படகுகள்,  நாட்டு படைகுகள் வலைகளில் சிக்கி விசைப்படகுகளுக்கு மிகப்பெரிய தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால்  தொடர் தொழில் நடத்த முடியாததால் படகுகள்  வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகிறது, இது சம்பந்தமாக அரசுக்கு பல கோரிக்கைகள், பதிவு தபால் மூலம் முதல்வரின் தனிப்பிரிவு,  மீன்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு தபால் மூலமாகவும் நேரிலும் சென்று முறையிட்டு எந்த வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.


மீன்வளத்துறைக்கு எதிராக  29ஆம்தேதி ஈசிஆர் சாலையில் மறியல் - தஞ்சை மல்லிப்பட்டினம் மீனவர்கள் அறிவிப்பு

அதனை முன்னிட்டு மீனவர்கள் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர்களது  வாழ்வாதாரம் கேள்வி ஆனதால், வரும் இன்று முதல் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கொண்டு, மீன்பிடி தொழிலுக்கு செல்வது, தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்திருப்பதாக தொழிலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகள் மீது சோதனை என்ற பெயரில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் படகுகள் மீது உண்மைக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட வலை வைத்து மீன் பிடித்தாய் என்று,  எந்தவித ஆதாரமும் இன்றி சில படகுகள் மீது வழக்கு தொடர்ந்து,  அவற்றின் மீது தண்டனை என்ற பெயரில், பல நாட்கள் தொழில் அனுமதி வழங்காமல் பல நாட்கள் தொழில் செய்ய விடாமல் தடுத்தும் அவற்றின் மீது அபராதம் என்ற பெயரில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் செலுத்த முடியாத ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று மீன் துறை நாகப்பட்டினம் இணை இயக்குனர்  அறிவித்துள்ளார்.


மீன்வளத்துறைக்கு எதிராக  29ஆம்தேதி ஈசிஆர் சாலையில் மறியல் - தஞ்சை மல்லிப்பட்டினம் மீனவர்கள் அறிவிப்பு

இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் இந்த நேரத்தில் மீனவர்கள், தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடன் மறு விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதுவரை உடன் சம்பந்தப்பட்ட படகுகளை தொழிலுக்கு அனுப்ப வேண்டும். கடந்த காலம் போல் தடைசெய்யப்பட்ட வலைகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் படகுகள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட தங்கூஸ் வலை போன்ற தடை செய்யப்பட்ட எந்த வலையாக இருந்தாலும், நாட்டுப்படகாகவோ, விசைப்படகாகவோ இருந்தாலும் பாரபட்சமின்றி கடலுக்குல் ரோந்து சென்று ஆதாரத்துடன் பிடித்து தண்டனை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு, நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் கடந்த 15 நாட்களாக இருந்தும், மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமலும் அரசு கண்டுகொள்ளாம் இருப்பதனால், தமிழக அரசையும் , மீன்வளத்துறை இணை இயக்குனரை கண்டித்து வரும் 29ஆம் தேதி முதல், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையில், தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மீன்வளத்துறைக்கு எதிராக  29ஆம்தேதி ஈசிஆர் சாலையில் மறியல் - தஞ்சை மல்லிப்பட்டினம் மீனவர்கள் அறிவிப்பு

இது குறித்து மாநில பொது செயலாளர் தாஜூதீன் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலேயே,  மல்லிப்பட்டிணம், சேதுபாவசத்திரம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய மூன்று ஊர்களில்தான் துறைமுகம் உள்ளது. இந்த மூன்று ஊர்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்து, கடலுக்கு செல்லாமல் இருக்கும் நிலையில், மீனவர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமோ, மீன்வளத்துறை அதிகாரிகளோ, தமிழக அரசோ கண்டு கொள்ளாமல், மீனவர்களை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் அலட்சியத்தால், 11 நாட்களில் சுமார் 50 கோடி மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தராவிட்டால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, மல்லிப்பட்டினம்  கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையை மறி்த்த, காலவரையற்ற போராட்டம் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு
TVK Maanadu Madurai | ட்ரோன் மூலம் மருந்துகள் TVK மாநாட்டில் புது ஐடியா அசந்து போன தொண்டர்கள்! Vijay
BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
EC Slams Rahul: “பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“ - ராகுலை சாடிய தேர்தல் ஆணையம்
“பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“ - ராகுலை சாடிய தேர்தல் ஆணையம்
Rahul Launch Yatra: “பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விட மாட்டேன்“ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் சூளுரை
“பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விட மாட்டேன்“ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் சூளுரை
அன்புமணி பதவி பறிப்பு.. பாமக தலைவர் ஆனார் ராமதாஸ்!
அன்புமணி பதவி பறிப்பு.. பாமக தலைவர் ஆனார் ராமதாஸ்!
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 18-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 18-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
Embed widget