மேலும் அறிய

பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு; விரக்தியில் பருத்தி விவசாயம்!

வேளாண் பொருட்களுக்கு அனுமதியளித்தும் அவை பின்பற்றப்படாததால், பூச்சி மருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணத்தால் பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு. பருத்தி சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்படும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை.
 
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தால் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
முழு ஊரடங்கில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இதற்கு உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை கால பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. ஒரு சில கடைகள் மட்டும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2000 ஏக்கர் பரப்பளவு குறைவானதாகும். பருத்தி சாகுபடியின் பரப்பளவு குறைந்ததற்க்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் ஒரு சில தினங்களில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் பூச்சி மருந்து வாங்குவதற்காக தங்களது வாகனங்கள் மூலமாக கடைத்தெருவிற்கு செல்லும்போது காவல்துறையினர் மறித்து வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று அபராதம் விதிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
மேலும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடைகால பணப்பயிராக கருதப்படும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க 50 சதவீத மானிய விலையில் பூச்சி மருந்துகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

சில நிமிடங்கள் கையில் இருந்தால் போதும்... மதுரையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு ஈசியா பறக்கலாம் !
சில நிமிடங்கள் கையில் இருந்தால் போதும்... மதுரையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு ஈசியா பறக்கலாம் !
உதவித் தொகையை உயர்த்துங்கள்... கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
உதவித் தொகையை உயர்த்துங்கள்... கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சட்டப்பேரவையை ‘லாவணி கச்சேரி’யாக மாற்ற வேண்டாம்; மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் தஞ்சையில் உ.வாசுகி வலியுறுத்தல்
சட்டப்பேரவையை ‘லாவணி கச்சேரி’யாக மாற்ற வேண்டாம்; மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் தஞ்சையில் உ.வாசுகி வலியுறுத்தல்
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடன் போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும்... மா.கம்யூ., வலியுறுத்தல்
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடன் போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும்... மா.கம்யூ., வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?
Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?
MK Stalin: திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
அறிமுகமாகியது Jawa All Stars 42 FJ பைக்.. சும்மா அசத்தலா இருக்குது! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Jawa All Stars 42 FJ பைக்.. சும்மா அசத்தலா இருக்குது! விலை எவ்ளோ?
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !
பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !
Chennai Power Cut: சென்னை மக்களே.! சனிக்கிழமை (29.08.2026) கூட பவர் கட் இருக்கு; எந்தெந்த ஏரியாக்கள்னு பாருங்க
சென்னை மக்களே.! சனிக்கிழமை (29.08.2026) கூட பவர் கட் இருக்கு; எந்தெந்த ஏரியாக்கள்னு பாருங்க
Embed widget