மேலும் அறிய

பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு; விரக்தியில் பருத்தி விவசாயம்!

வேளாண் பொருட்களுக்கு அனுமதியளித்தும் அவை பின்பற்றப்படாததால், பூச்சி மருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணத்தால் பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு. பருத்தி சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்படும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை.
 
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தால் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
முழு ஊரடங்கில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இதற்கு உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை கால பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. ஒரு சில கடைகள் மட்டும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2000 ஏக்கர் பரப்பளவு குறைவானதாகும். பருத்தி சாகுபடியின் பரப்பளவு குறைந்ததற்க்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் ஒரு சில தினங்களில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் பூச்சி மருந்து வாங்குவதற்காக தங்களது வாகனங்கள் மூலமாக கடைத்தெருவிற்கு செல்லும்போது காவல்துறையினர் மறித்து வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று அபராதம் விதிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
மேலும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடைகால பணப்பயிராக கருதப்படும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க 50 சதவீத மானிய விலையில் பூச்சி மருந்துகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Super She Island : இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் இருக்கு.?
இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் அங்கு இருக்கு.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Embed widget