மேலும் அறிய

பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு; விரக்தியில் பருத்தி விவசாயம்!

வேளாண் பொருட்களுக்கு அனுமதியளித்தும் அவை பின்பற்றப்படாததால், பூச்சி மருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணத்தால் பூச்சிமருந்து கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு. பருத்தி சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்படும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை.
 
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தால் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
முழு ஊரடங்கில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இதற்கு உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை கால பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. ஒரு சில கடைகள் மட்டும் தமிழக அரசின் அறிவுறுத்தல் படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2000 ஏக்கர் பரப்பளவு குறைவானதாகும். பருத்தி சாகுபடியின் பரப்பளவு குறைந்ததற்க்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் ஒரு சில தினங்களில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் பூச்சி மருந்து வாங்குவதற்காக தங்களது வாகனங்கள் மூலமாக கடைத்தெருவிற்கு செல்லும்போது காவல்துறையினர் மறித்து வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று அபராதம் விதிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
மேலும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக நெல் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடைகால பணப்பயிராக கருதப்படும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க 50 சதவீத மானிய விலையில் பூச்சி மருந்துகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
Honda ADV 160: லாங் ரைட் போகணுமா..! பைக்கிற்கு நோ, யமஹா, TVS-க்கு போட்டியாக ஹோண்டா ஸ்கூட்டர் - முழு விவரம்
லாங் ரைட் போகணுமா..! பைக்கிற்கு நோ, யமஹா, TVS-க்கு போட்டியாக ஹோண்டா ஸ்கூட்டர் - முழு விவரம்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
Embed widget