US India | இந்தியா - அமெரிக்கா டீல் "நாட்டை தப்பா வழிநடத்துறாங்க"பியூஸ் கோயல் காட்டம் Piyush Goyal
இந்தியா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக அதிக வரி விதித்து வந்த நிலையில், திடீரென இந்தியா அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து ட்ரம்ப் தனது ட்வீட்டில், ``இந்தியா மீதான பரஸ்பர வரி 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் விதிக்கப்பட்ட 25 சதவிகிதம் வரி நீக்கப்படும். இனி இந்தியா ரஷ்யாவுக்குப் பதில் அமெரிக்காவிடமும், வெனிசுலாவிடமும் கச்சா எண்ணெய் வாங்கும்" என்று தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்துக்காக பிரதமர் டிரம்புக்கு மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தம் திடீரென போடப்பட்டிருக்கிறது. இதில் எந்தவொரு விளக்கமும் இல்லை. அதோடு, இந்த ஒப்பந்தத்தால் ரஷ்யாவுடனான பல தாசப்த உறவு முடிவுக்கு வரக்கூடும்" என்று தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பியூஸ் கோயல், ``ட்ரம்புடன் மோடி செய்துள்ள வர்த்தக ஒப்பந்தமானது, இதுவரை நாம் போட்ட ஒப்பந்தங்களிலேயே சிறந்தது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், 140 கோடி மக்களுக்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, சிறு குறு நடுத்தர தொழில்கள், ஜவுளி, ஆபரணங்கள், தோல் பொருள்கள், பொறியியல் துறை மற்றும் கடல்சார் பொருள்கள் துறையில் ஏராளமான வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும். ராகுல் காந்தி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. UPA அரசு 10 வருடங்களில் பொருளாதாரத்தை நாசமாக்கி வளர்ச்சியை நிறுத்தினர். அவர்களின் எண்ணம் ஈடேறாது" என்று கூறினார். இன்னொருபாக்கம், இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை இந்த வாரத்தில் வெளியாகக் கூடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.






















