மேலும் அறிய

CBSE Board 2026: மாணவர்களுக்கு கெடுபிடி..! 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விதிகளை கடுமையாக்கிய சிபிஎஸ்இ - புது ரூல்ஸ்..

CBSE Board 2026 Rules: பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகளை கடுமயாக்கி சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

CBSE Board 2026 Rules: பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான புதிய விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் - புதிய விதிகள் அமல்

10 மற்றும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான விதிகளை திருத்தி, சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பொதுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இந்த விதிகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வருகைப்பதிவு, இண்டெர்னல் அசெஸ்மெண்ட்ஸ் எனப்படும் உள் மதிப்பீடுகள் மற்றும் எழுதும் விதிமுறைகள் ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் ஒரே கல்வி ஆண்டில் இரண்டு முறை பொதுதேர்வு எழுதும் வாய்ப்பை பெறுவர். புதிய சீர்திருத்தங்களானது நியாயமான வாய்ப்புகளை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை சுயமாக மேம்படுத்திக் கொள்ள புதிய விதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பொதுத்தேர்வுகளில் CBSE-யின் புதிய விதிகள் என்ன?

1. கட்டாய வருகைப் பதிவு..

சிபிஎஸ்இ நிர்வாகம் மேற்கொண்டுள்ள மாற்றங்களில் குறிப்பிட்ட அளவிலான வருகைப்பதிவு கட்டாயம் என்பது மிக முக்கியமானதாக கூறப்படுகிறது. 9-10 மற்றும் 11-12ம் வகுப்பு மாணவர்கள், இரண்டு ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவை கொண்டிருந்தால் தான், பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வருகைப் பதிவுகளுக்கு பொருந்தும். அதேநேரம், மருத்துவ விடுப்பு போன்ற விதிவிலக்குகளுக்கு வழக்கமாக செல்லுபடியாகும் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இன்டெர்னல் மதிப்பெண்கள்..

இரண்டாவதாக, இண்டெர்னல் மதிப்பெண்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமும் கவனத்தை ஈர்க்கிறது. ப்ராஜக்ட், செய்முறை தேர்வு மற்றும் சீரான இடைவெளியில் பள்ளிகளில் வைக்கும் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக உருவெடுத்துள்ளன. ஒரு இன்டர்னல் அசெஸ்மெண்டை தவறவிட்டால் கூட, வாரியத்தின் “அத்தியாவசிய மறுபரிசீலனை” பிரிவின் கீழ் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியற்றவராக அறிவிக்கப்படலாம். பள்ளிகள் இந்த மதிப்பீடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து இணக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. இரண்டு முறை தேர்வு வாய்ப்புகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படுவது மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. பிப்ரவரி - மார்ச் மாதத்தில் ஒரு முறையும், மே-ஜுன் மாதங்களில் ஒருமுறையும் தேர்வுகள் நடத்தப்படுமாம். இரண்டு முறையும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், அதில் சிறந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாவது தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முதலில் நடைபெறும் தேர்வில் குறைந்தபட்சம், 3 பாடங்களுக்கான தேர்விலாவது பங்கேற்று இருக்க வேண்டும்.

4. தேர்வு எழுதும் நடைமுறை

கடைசியாக விடைத்தாளை நிர்வகிப்பதற்கான விதிகளையும் சிபிஎஸ்இ நிர்வாகம் மாற்றியுள்ளது. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை, மாணவர்கள் விடைத்தாளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கட்டாயமாக எழுத வேண்டுமாம். குறிப்பிட்ட பகுதியை தாண்டி எழுதப்பட்டு இருந்தால்,  பதில் சரியானதாக இருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படாமல் போக வாய்ப்புள்ளதாம். திருத்துபவர்களுக்கான சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீர்திருத்தங்களானது, தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து செயல்படவும், மனப்பாடம் செய்வதை தடுத்து மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கவும் CBSE மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும். 2026 பொதுத்தேர்வுகளில் கடைசி நிமிட சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்க, பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் புதிய விதிகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாராகவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன புதிய விதிகள்?

வருகைப்பதிவு, உள் மதிப்பீடுகள் மற்றும் தேர்வு எழுதும் முறையில் புதிய விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும்.

பொதுத்தேர்வு எழுத எவ்வளவு வருகைப் பதிவு அவசியம்?

9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு வைத்திருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு போன்ற விதிவிலக்குகளுக்கு ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.

10 ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை முறை பொதுத்தேர்வு எழுதலாம்?

10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரே கல்வி ஆண்டில் இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதும் வாய்ப்பை பெறுவர். முதல் முறை தேர்வு எழுதினால் மட்டுமே இரண்டாவது முறை எழுத முடியும்.

உள் மதிப்பீடுகள் (Internal Assessments) ஏன் முக்கியம்?

ஒரு உள் மதிப்பீட்டை தவறவிட்டாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியற்றவராக அறிவிக்கப்படலாம். பள்ளிகள் இந்த மதிப்பீடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உங்க வீட்டு பிள்ளைகளிடம் கலைத்திறமை இருக்கா? - இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!
உங்க வீட்டு பிள்ளைகளிடம் கலைத்திறமை இருக்கா? - இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget