மேலும் அறிய

Tiruvallur: தங்கையுடன் கள்ளக்காதல்.. தடையாக இருந்த மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற கணவன்!

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரியை அடுத்துள்ள பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கௌசல்யாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தகாத உறவால் கௌசல்யாவை ராஜேஷ் கொலை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கணவனின் தகாத உறவே காரணம் எனவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மதுரா கண்டிகை என்ற ஏரியாவில் முருகன் என்பவர் தனது மனைவி ரேவதியுடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற 20 வயது மகள் இருந்தார். இந்த பெண் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளநிலை படிப்பை முடித்த நிலையில் பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியருக்கான பட்டப்படிப்பு பயின்று வந்தார். 

இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரியை அடுத்துள்ள பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கௌசல்யாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேஷ் மணமகள் கௌசல்யாவுக்கு தூரத்து உறவு முறையில் முறைப்பையன் ஆகும். திருமணத்திற்கு பிறகும் தனது பிஎட் படிப்பை பயின்று வந்த கௌசல்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அதாவது சம்பவம் நடந்த நாளில் காலையில் ராஜேஷ் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். மதிய நேரத்தில் கௌசல்யா வீட்டில் மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் பார்த்து ராஜேஷூக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வீட்டுக்கு வந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று சமையலறையில் மயங்கி கிடந்த கௌசல்யாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

சமையலறையில் கௌசல்யா மயங்கி கிடந்த நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் மயக்கம்போட்டு விழுந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர். கௌசல்யாவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், மாமனார் முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

ஆனால் மருத்துவமனையில் மகளை காண வந்த முருகன் அவரது முகத்தில் காயம் இருப்பதற்கான  அறிகுறிகளைக் கண்டு உடனடியாக காவல் நிலையத்தில் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையிலான போலீசார் ராஜேஷை அழைத்து விசாரணை நடத்தினர். அதேசமயம் அவர்கள் வீட்டிலும் தடயவியல் சோதனையும் நடைபெற்றது. 

மேலும் கௌசல்யா தலையில் ஏற்பட்ட காயம் கீழே மயங்கி விழுந்ததால் ஏற்பட்டது போல இல்லாமல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் முகத்திலும், கழுத்திலும் நகக்கீறல்கள் இருந்ததைப் பற்றி கேட்ட போது ராஜேஷ் சம்பந்தமில்லாத பதில்களை கூறியுள்ளார். இதனால் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபடவே, தனது மனைவியை கொலை செய்ததை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். 

இந்த கொலைக்கு தனக்கு இருந்த தகாத உறவு தான் காரணம் எனவும் போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். அதாவது ராஜேஷூக்கு தூரத்து உறவினர் என்ற வகையில் தங்கை முறையில் வரும் செங்குன்றம் காந்திநகரில் வசித்து வரும் தீபிகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் உறவு முறையை மறந்து காதலிக்க தொடங்கியுள்ளனர். அண்ணன் - தங்கை முறை என்பதால் காதலை வீட்டிலும் சொல்ல முடியாமல் தவித்துள்ளனர். இப்படியான நிலையில் கௌசல்யாவுடன் ராஜேஷூக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

மனைவி கல்லூரிக்கு சென்ற பிறகு ராஜேஷ் தீபிகாவுடன் உறவை வளர்த்துள்ளார். அப்படியாக கொலை நடைபெறுவதற்கு இரு தினங்கள் முன்பு இருவரும் தனிமையில் நேரம் செலவிட்டுள்ளனர். அப்போது உன் மனைவி கௌசல்யா உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. அதனால் அவளை கொலை செய்து விடு என தீபிகா ஐடியா  சொல்ல அதனை ராஜேஷ் செயல்படுத்தியுள்ளார். 

கொலை நடந்த நாளில் அக்கம் பக்கத்தினரிடம் தான் வேலைக்கு செல்வதாக சொல்லிச் சென்ற ராஜேஷ், சில நிமிடங்களில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவின் மூக்கை மூட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அப்போது தான் அவர் முகத்திலும் கழுத்திலும் நகக்கீறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டைல்ஸில் அவரது பின்னந்தலையை மோதி காயம் ஏற்படுத்தியுள்ளார். எண்ணெய் வழுக்கி கௌசல்யா விழுந்து உயிரிழந்ததாக செட்டப் செய்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ், தீபிகா இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget