மேலும் அறிய

மயிலாடுதுறை: தூர்வார ஒரு அளவு இல்லையா? படாரென உள்வாங்கிய பாலம்.!

மயிலாடுதுறை அருகே கோயில் குளம் 20 அடி ஆழம்வரை தூர்வாரியதால் தண்ணீர் செல்லும் பாலம் உள்வாங்கி  போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் பகுதியில் பாலாகுடி பன்னீர் வெளியில் மயிலாடுதுறையை இணைக்கும் சாலை உள்ளது.  இந்த சாலை மயிலாடுதுறை, மணல்மேடு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து மேலாநல்லூர்வரை செல்லும் இந்த சாலை, 10 க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் அரசு நகரப்பேருந்துகளும், அப்பகுதி மக்கள் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஏராளமானவை தினம் தோறும் சென்று வருகிறது.  இந்நிலையில் சாலையை ஒட்டி பாலாகுடி பிள்ளையார்கோயிலை சேர்ந்த இரண்டு ஏக்கரிலான பெரிய அளவு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கும் பாலாகுடி வாய்க்காலுக்கும் இடையே அக்கிராமத்தின் பிரதான சாலை செல்வதால் அங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  


மயிலாடுதுறை: தூர்வார ஒரு அளவு இல்லையா? படாரென உள்வாங்கிய பாலம்.!

இந்த சூழலில் கடந்த ஆண்டு இந்த குளம் முழுவதும் தூர்வார் வாரப்பட்டுள்ளது. இதனால் 15 அடி ஆழம் முதல் 20 ஆழம்வரை மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல்மேடு பகுதியில் 85 மில்லிமீட்டர் மழை பெய்தது, அத்துடன் பாலாகுடி வாய்க்காலில் விடப்பட்ட தண்ணீர் பிள்ளையார் கோயில் குளத்திற்கு பாய்ந்துள்ளது. சாலையை ஒட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் 15 அடி ஆழத்திற்கு தூர் வாரியதால் பாலம் வழியாகச் சென்ற தண்ணீர் சிறுகச்சிறுக சாலையை அரித்து பாலத்தின் கீழும் தண்ணீர் வேகமாக குளத்திற்குச் சென்றதால் பாலம் முழுவதும் இடிந்து சாலையுடன் உள்வாங்கியது.

கிராமத்தில் பிரதான சாலையில் உள்ள பாலம் உடைந்ததால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. அருகில் உள்ள பிள்ளையார்கோயில் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் மற்றும் சாலையை சரிசெய்து மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பாலாகுடி, பன்னீர்வெளி மற்றும் மேலாநல்லுர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை: தூர்வார ஒரு அளவு இல்லையா? படாரென உள்வாங்கிய பாலம்.!

மேலும் குளம் தூர் வாருவதற்கு என ஒரு வரைமுறை உள்ளது என்றும், மணல் தேவைக்காக சட்டத்திற்கு புறம்பாக குளம் தூர்வார அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் குளம் தூர்வாரப்பட்டுள்ளதால்தான் பாலத்தின் அடியில் அரிப்பு ஏற்பட்டு பாலம் முழுவதும் இடிந்து உள்வாங்கியாதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி கிராம மக்கள் பாலம் உள்வாங்க காரணமான குளத்தினை தூர்வார ஒப்பந்ததாரர் மீது அரசு நடவடிக்கை எடுத்து இடிந்த இந்த பாலத்தினை உடனடியாக போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக புதிய பாலம் முழு தரத்துடன் கட்டி துண்டித்து போய்வுள்ள கிராமத்தின் போக்குவரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும், இல்லை எனில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், வேலைகளுக்காக நகர்ப்புற செல்லமுடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குளிர்ச்சி கொடுத்த எலுமிச்சைப்பழம்… இன்று கஷ்டம் கொடுக்கும் விலை
குளிர்ச்சி கொடுத்த எலுமிச்சைப்பழம்… இன்று கஷ்டம் கொடுக்கும் விலை
உயிர் பறிக்கும் நால்ரோடு : ரவுண்டானா அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உயிர் பறிக்கும் நால்ரோடு : ரவுண்டானா அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கோடை வெப்பத்தில் குளிர்ந்த வருமானம் – வெள்ளரி சாகுபடியில் புதிய பாதை
கோடை வெப்பத்தில் குளிர்ந்த வருமானம் – வெள்ளரி சாகுபடியில் புதிய பாதை
பின்னலாடை நகரான திருப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் KVB: புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்
பின்னலாடை நகரான திருப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் KVB: புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
Tasmac shop closed : 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
Embed widget