மேலும் அறிய

நூல் வாசிப்பே நல்ல தலைவராக்கும்... மாணவர்களுக்காக தஞ்சையில் தொடங்கிய ‘ஒருநாள், ஒருநூல் வாசிப்பு இயக்கம்’.!

 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு நாள், ஒரு நுால் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ’ஒரு நாள், ஒரு நுால் வாசிப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

உலகின் பெரிய தலைவர்கள், மாமேதைகள், ஆளுமை மிக்க நிர்வாகிகள் வாழ்க்கை வரலாற்றை படித்த போது அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்தது “புத்தகம் வாசிக்கும் பழக்கம்”  தான் அது. “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியது அனைவருக்கும் ஏற்ற உண்மைதானே. இன்றைய நல்ல வாசகன்தான் நாளை நல்ல தலைவன் ஆக முடியும் என்பதை பல தலைவர்களும் நிரூபித்துள்ளனர்.

இன்றைய நாளில் நூல்கள் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. நமது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்கிக் கொண்டு அறிவை மேம்படுத்திக் கொள்ள நூல்களே மிகச் சிறந்த கருவியாக உள்ளன. ஒருவர் பயிலும் சிறந்த நூல்களே அவர்களின் வாழ்க்கையை உருவாக்குகிறது. இன்றைய உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை போக்கி நம்மை முழுமையாக்கி கொள்ளவும் உதவும். இன்றைய காலக்கட்டத்தில மாணவர்கள் மத்தியில் நூல் வாசிப்பது என்பதே இல்லாத ஒன்றாக உள்ளது. காரணம் மொபைல் போன்கள்தான். அதிலும் நூல் வாசிக்கலாம்.

ஆனால் மாணவர்கள் மொபைல் போனில் விளையாட்டுக்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இது அவர்களின் மனநிலையை பாதிப்புக்கு உள்ளாக்கும். இதிலிருந்து மாணவர்களை மீட்க நூல் வாசிப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நுால் – வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி நேற்று துவங்கியது.


நூல் வாசிப்பே நல்ல தலைவராக்கும்... மாணவர்களுக்காக தஞ்சையில் தொடங்கிய ‘ஒருநாள், ஒருநூல் வாசிப்பு இயக்கம்’.!
இந்த நிகழ்ச்சி நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளரான மேல்நிலை பழனிவேலு, இடைநிலை மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் மாணவர்கள் அறிவியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர்.

ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதன் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
Embed widget