மேலும் அறிய

காற்றானால் என்ன? கனமழையானால் என்ன? நாட்டியத்தை நிறுத்தாமல் ஆடிய நடன கலைஞர்கள்: எங்கு தெரியுங்களா?

மழை இடி, மின்னல், காற்றுடன் கன மழை பெய்தது. கனமழையிலும் நாங்கள் ஈசனுக்கு இசை அஞ்சலி செய்வோம் என்று  நாட்டியத்தை நிறுத்தாமல் பரத கலைஞர்கள் தொடர்ந்து நடனம் ஆடியதுதான் நவராத்திரி விழாவின் மைல்கல்லாகும்.

தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் ஆரம்பித்த மழை மாலையில் கனமழையாக மாறியது. இடி,மின்னல் காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையிலும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை ஒட்டி பரதநாட்டிய கலைஞர்கள் தங்களின் பரத நாட்டியத்தை நடத்தினர்.

தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு கோடை வெப்பம் போல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது, தஞ்சை, கண்டியூர் மேல திருப்பூந்துருத்தி, திருவையாறு, விளார், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்


காற்றானால் என்ன? கனமழையானால் என்ன? நாட்டியத்தை நிறுத்தாமல் ஆடிய நடன கலைஞர்கள்: எங்கு தெரியுங்களா?

அதே நேரத்தில் காலை முதல் வெயிலால் அவதிப்பட்ட வந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழை சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி ஆறுதலை தந்தது. தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் நடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 22.ம் தேதி சிறப்பாக தொடங்கியது.  இதில் நான்காம் நாளாக இன்று பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் சுவாமியை தரிசனமும் செய்தனர்.

இந்த கலை நிகழ்ச்சியும் கொட்டும் மழையில் தடைபடாமல் நடந்தது. பரத கலைஞர்கள் திமிக்க, திமிக்க தக்க திமிக்கிட தோம்,  தோம் தோம் தகிட்ட தகிட்ட தக்கதோம் ஈசா சர்வேசா, சிவ சம்போ சம்போ சிவசம்போ என்ற நட்டுவாங்கத்திற்கு ஏற்ப இடி, மின்னல், காற்று கனமழை தங்கள் பங்கிற்கு இசைக்க பரதம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள் பரத கலைஞர்கள். மழையையும் பொருட்படுத்தாமல் பரத கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தியதை கண்டு பக்தர்கள் உற்சாகமாக கைத்தட்டி பாராட்டுக்களை குவித்தனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டப மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத கலைஞர்கள் நந்தி மண்டபம் மேடையில் நாட்டியம் ஆடி கொண்டிருந்த நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தூறலாக தொடங்கிய மழை இடி, மின்னல், காற்றுடன் கன மழை பெய்தது. கனமழையிலும் நாங்கள் ஈசனுக்கு இசை அஞ்சலி செய்வோம் என்று  நாட்டியத்தை நிறுத்தாமல் பரத கலைஞர்கள் தொடர்ந்து நடனம் ஆடியதுதான் நவராத்திரி விழாவின் மைல்கல்லாகும்.

தி மிக்க திமிக்க தக்க திமிக்கிடதோம். தோம் தோம் தகிட்டத தகிட்டத தக்கதோம் திமிக்க திமிக்க தக்க திமிக்க திமிக்க தக்க ஈசா சர்வேசா தோம் தோம் சிவ சம்போ, சம்போ சிவ சம்போ என நட்டுவாங்கம் இசைக்க தாளம் தப்பாமல் நடனம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள் பரதநாட்டிய கலைஞர்கள். மழையில் கூடியிருந்து நாட்டியத்தை  ரசித்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் .

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget