மேலும் அறிய

அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேர் கைது: எதற்காக தெரியுங்களா?

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி  மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 பேர் போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி  மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்துக்கு, சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடனடி நிரந்தர பதவி உயர்வு வழங்கி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும். 

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு 100 நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதிய நலன்கள் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள்  எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து பின்னர் மாலையில் விடுவித்தனர். 

கட்டுமானத் தொழிலாளர்கள் மனு

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் ஏஐசிசிடியு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில், ஏஐசிடபிள்யூஎப் தேசியக் குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட குழு ஜெயபால், நடராஜன், அல்போன்ஸ், ரமேஷ், ராமலிங்கம், ஏஐசிசிடியு மாவட்ட குழு ரவிச்சந்திரன், மாரியப்பன், , மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் ஐந்து சென்ட் வீட்டுமனை உடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும், நல வாரிய நல திட்ட உதவி தொகை அனைத்தையும் இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இதில் 50க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த இவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

மரண பயத்தைக் காட்டும் தெருநாய்கள்: டெல்டா மாவட்டங்களில் பொதுமக்கள் அலறல்... தீர்வு என்ன? ஓர் அதிர்ச்சிப் பார்வை!
மரண பயத்தைக் காட்டும் தெருநாய்கள்: டெல்டா மாவட்டங்களில் பொதுமக்கள் அலறல்... தீர்வு என்ன? ஓர் அதிர்ச்சிப் பார்வை!
அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget