மேலும் அறிய

அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேர் கைது: எதற்காக தெரியுங்களா?

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி  மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 பேர் போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி  மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்துக்கு, சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடனடி நிரந்தர பதவி உயர்வு வழங்கி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும். 

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு 100 நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதிய நலன்கள் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள்  எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து பின்னர் மாலையில் விடுவித்தனர். 

கட்டுமானத் தொழிலாளர்கள் மனு

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் ஏஐசிசிடியு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில், ஏஐசிடபிள்யூஎப் தேசியக் குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட குழு ஜெயபால், நடராஜன், அல்போன்ஸ், ரமேஷ், ராமலிங்கம், ஏஐசிசிடியு மாவட்ட குழு ரவிச்சந்திரன், மாரியப்பன், , மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் ஐந்து சென்ட் வீட்டுமனை உடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும், நல வாரிய நல திட்ட உதவி தொகை அனைத்தையும் இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இதில் 50க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த இவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget