மேலும் அறிய

செங்கல்பட்டு: வடிவேல் பாணியில் கிணத்தக் காணோம்! கிணறு இடிந்து 'குட்டை'யான கதை!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே ரூ.9.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிணறு இடிந்து விழுந்து குட்டை போல காட்சியளிக்கிறது.

வடிவேல் ஒரு படத்தில் கிணறு வெட்டுவதற்கு லோன் வாங்கிக் கொண்டு கிணறை வெட்டாமல் இருப்பார். அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து வெட்டாத கிணறுக்கு வெட்டியதைப்போல ரசீதைப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். அப்போது காவல் அதிகாரியாக இருக்கும் நெல்லை சிவா கிணற்றை காணவில்லை என்று வழக்கா, " இந்த வேலையே தேவையில்லை " என்று ராஜினாமா செய்துவிட்ட சென்றுவிடுவார் . இந்த மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு காமெடி.
 

செங்கல்பட்டு: வடிவேல் பாணியில் கிணத்தக் காணோம்! கிணறு இடிந்து 'குட்டை'யான கதை!
காமெடியில் வருவதைப் போலவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளது. கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் பஞ்சாயத்தில் அக்கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் தரை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கிணறு தற்போது இடிந்து குட்டை போல் காட்சியளிக்கிறது.
 
பெருமாட்டுநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஏரிக்கரையில் இந்த கிணறு வெட்டப்பட்டது. தரை கிணற்றில் இருந்து மோட்டார்கள் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு கிராமம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது . இந்த தரைதள கிணறு அமைப்பதற்கு ரூ.9,50,000 ஒதுக்கப்பட்டது.   இந்த நிதியின் மூலம் கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டு இந்தக் கிணறு கட்டி முடிக்கப்பட்டு கிராமத்தின் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  அந்த கிராமத்தில் குடியிருக்கும் 350 குடும்பங்களுக்கு இந்த கிணறு பயனுள்ளதாக இருந்து வந்தது.
 

செங்கல்பட்டு: வடிவேல் பாணியில் கிணத்தக் காணோம்! கிணறு இடிந்து 'குட்டை'யான கதை!
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்தக் கிணறு சரிந்து விழுந்துள்ளது.  கான்கிரீட்டால் போடப்பட்டிருந்த மூடியும் உடைந்து அந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதன் காரணமாக குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறு இப்பொழுது குட்டை போல் கலங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் கிணற்று நீரை பயன்படுத்த முடியாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏறபட்டுள்ளது.
 
இதுகுறித்து பேசிய அப்பகுதிவாசி சுரேஷ் , ’’கிட்டதட்ட பத்து லட்ச ரூபாய் செலவு செய்து இந்த கிணறு அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிணறு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த கிணறு வெட்டிய சமயத்தில் குடிநீருக்காக நாங்கள் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலையில் இருந்தோம். இந்த கிணறு மூலம் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. தரமற்ற முறையில் இந்தக் கிணறு அமைக்கப்பட்டதால்  5 ஆண்டுகளில் தற்போது இது சரிந்து விழுந்துள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படும்’’ என்றார்.
 

செங்கல்பட்டு: வடிவேல் பாணியில் கிணத்தக் காணோம்! கிணறு இடிந்து 'குட்டை'யான கதை!
தரமான முறையில் கட்டப்படும் கிணறுகள் பல தலைமுறைகளை தாண்டி பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில் இதுபோன்ற தரமற்ற முறையில் கட்டப்படும் கிணறுகள் வடிவேல் பாணியில் காணாமல் போய்விடுகின்றன .
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Embed widget