மேலும் அறிய

Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லை எனக் கூறி, வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லை எனக் கூறி சிபிசிஐடியால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு, வழக்கு, வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தை விசாரித்து வந்த சிபிசிஐடி

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்

2 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த மாதம் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலரான முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், வேங்கைவயலில் பாதிக்கப்பட்டோரும், குற்றம்சாட்டப்பட்டோரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு

இந்த நிலையில், சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை கடந்த 1ம் தேதி நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டது குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்காதது குறித்து அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த அவர், புகார்தாரருக்கு 3 முறை சம்மன் அனுப்பியதாகவும், அவர் வர இயலாததாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதோடு, சம்பவத்தின்போது, அந்த தண்ணீரை யாரும் குடிக்கவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி தீர்ப்பு

இந்த நிலையில், இன்று(03.02.25) தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாகவும், அவர்கள் கோரியபடி, இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு, புகார்தாரர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Free Electric Stove: அனைவருக்கும் இலவச மின்சார அடுப்பு.? தமிழக மக்களுக்கு வெளியாகப்போகுது சூப்பர் அறிவிப்பு
அனைவருக்கும் இலவச மின்சார அடுப்பு.? தமிழக மக்களுக்கு வெளியாகப்போகுது சூப்பர் வாக்குறுதி.?
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?
‘கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ விஜயின் முடிவு என்ன?
தஞ்சையில் விஜயைப் பார்க்கச் சென்றபோது விபத்து; தவெக உதவலையா? விஜய் விளக்கம்
தஞ்சையில் விஜயைப் பார்க்கச் சென்றபோது விபத்து; தவெக உதவலையா? விஜய் விளக்கம்
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Embed widget