மேலும் அறிய

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

டெக்ஸ்டைல் பார்க் வந்து கொண்டிருந்தபோது சுக்காலியூர் அருகே வேன் மோட்டாரில் திடீரென தீ பிடித்து புகை கிளம்பியதால், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கினர்.

கரூர் அருகே ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர்கள் இறக்கிவிடப்பட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.


கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

கரூர் அருகே உள்ள டெக்ஸ்டைல் பார்க்கில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து தனியார் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களை, வேனில் ஏற்றிக்கொண்டு டெக்ஸ்டைல் பார்க் வந்து கொண்டிருந்த பொழுது சுக்காலியூர் அருகே வேன் மோட்டாரில் திடீரென தீ பிடித்து புகை கிளம்பியதால், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கினர்.


கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் தீப்பிடித்த வேனை அணைத்தனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர் இறக்கிவிடபட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அரவக்குறிச்சி கடைவீதியில் கருவாட்டுக் கடைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பினால் அப்பகுதி பரபரப்படைந்தது. தகவலறிந்த தீயனைப்புத் துறையினர் வந்து பாம்பை பிடித்தனர். 



கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

அரவக்குறிச்சி பெரிய கடை வீதியில் கடைகளில் விற்பனை பரப்பாக இருந்த நேரத்தில் திடீரென்று அங்கு காய்கறி கடையின் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்திலிருந்து  கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஊர்ந்து இறங்கியது. இதனைக் கண்டு பெரிய கடை வீதியில் சாமான்கள் வாங்கிக் கொண்டிகுந்த பொதுமக்கள் அலறி சத்தமிட்டனர். இதனால் கொம்பேறி மூக்கன் பாம்பு அருகிலிருந்த கருவாடு விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. 


கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்

 

பாம்பை பிடிக்க தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு லாகவமாக பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். கூடியிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால்  அரவக்குறிச்சி கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget