மேலும் அறிய

என்னாது 800 கோடி ரூபாயா.. மொத்தமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்.. எல். முருகன் பலே தகவல்

800 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறவிருப்பதாகவும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள 103 அமிர்த பாரத ரயில் நிலையங்களை பிரதமர்  மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சென்னை பரங்கிமலையில் அமைக்கப்பட்டுள்ள அமிர்த பாரத ரயில் நிலையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

புதுப்பொலிவு பெறும் எழும்பூர் ரயில் நிலையம்:

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தெற்கு ரயில்வேயில் 13 அமிர்த பாரத ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் தமிழ்நாட்டின் 8 நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரயில் நிலையமும் அடங்கும் என்றும் கூறினார்.

இத்தகைய நவீன ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் தெரிவித்தார். ரயில்வே துறையில் தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், 9 புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சேலம், காட்பாடி ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 800 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்சார்பு அத்தியாயத்தில் புதிய மைல்கல்:

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது அந்த நிறுவனத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று டாக்டர் எல். முருகன் கூறினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சகாப்தத்தில் இந்தியாவின் தற்சார்பு அத்தியாயத்தில் இதுவொரு சாதனையாகும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மும்பை, அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 6 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்டு எதிரிகளின் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலிருந்து 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு தா. மோ. அன்பரசன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget