மேலும் அறிய

என்னாது 800 கோடி ரூபாயா.. மொத்தமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்.. எல். முருகன் பலே தகவல்

800 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறவிருப்பதாகவும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள 103 அமிர்த பாரத ரயில் நிலையங்களை பிரதமர்  மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சென்னை பரங்கிமலையில் அமைக்கப்பட்டுள்ள அமிர்த பாரத ரயில் நிலையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

புதுப்பொலிவு பெறும் எழும்பூர் ரயில் நிலையம்:

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தெற்கு ரயில்வேயில் 13 அமிர்த பாரத ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் தமிழ்நாட்டின் 8 நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரயில் நிலையமும் அடங்கும் என்றும் கூறினார்.

இத்தகைய நவீன ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் தெரிவித்தார். ரயில்வே துறையில் தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், 9 புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சேலம், காட்பாடி ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 800 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்சார்பு அத்தியாயத்தில் புதிய மைல்கல்:

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது அந்த நிறுவனத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று டாக்டர் எல். முருகன் கூறினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சகாப்தத்தில் இந்தியாவின் தற்சார்பு அத்தியாயத்தில் இதுவொரு சாதனையாகும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மும்பை, அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 6 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்டு எதிரிகளின் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலிருந்து 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு தா. மோ. அன்பரசன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget