மேலும் அறிய

TVK Anand, CTR Nirmalkumar: ‘வெளியே வந்த பூனைக்குட்டிகள்‘; விஜய்யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார்; CTR பேட்டி

கரூர் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர்.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சிடிஆ நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, செந்தில் பாலாஜி மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

விஜய்யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார்

கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தவெக  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், அவர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இதனிடையே, கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி, புதிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவும் ரத்தாகியுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். அதன்பின்னர் சிடிஆர் நிர்மர்குமார் அளித்த பேட்டியில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.

செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டிய சிடிஆர் நிர்மல்குமார்

கரூர் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், பாஜகவிற்கு தவெக அடிபணிந்துவிட்டது, பாஜக கூட்டணிக்கு செல்ல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது குறித்து சிடிஆர் நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இதற்கு முன் திமுக பல விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை கோரியுள்ளதாவும், அப்போது அவர்கள் மத்திய அரசின் கூட்டணியில் இருந்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார். ஒரு ஏஜென்சி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மதித்து செயல்பட வேண்டும் என கூறினார்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கொடுத்த உத்தரவை பொதுவெளியில் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் தான் அது குறித்து பேச முடியும் என்றும், அதற்காக தாங்கள் காத்திருந்ததாகவும், அதற்கான நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கரூர் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல்குமார், யார் அந்த வழக்குகளை தொடுத்தது என்று தெரியவில்லை என்றும், ஆனால் அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறினார்.

அதோடு, கரூரில் ஒவ்வொருவரும் மிரட்டப்படும் நிலை உள்ளதாகவும், பிறள் சாட்சி மன்னனாக இருக்கும் ஒரு வழக்கிற்கே சொந்தக்காரர் செந்தில் பாலாஜி என கடுமையாக விமர்சித்தார். அதனால் தான் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 50 பேரையே பிறள் சாட்சியாக மாற்றிய செந்தில் பாலாஜிக்கு, 4, 5 பேரை பிறளாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என அவர் கூறினார். அப்படி யார் மிரட்டினாலும், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும், அதை ரொம்ப நாட்கள் தள்ளிப்போட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தலைமறைவாக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் தற்போது வெளியே வந்து விஜய்யை சந்தித்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் நேற்று இரவு விஜய்யை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
TN Voters List: தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Embed widget