மேலும் அறிய

ABP EXCLUSIVE: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தது ஏன்? டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்..

திமுகவின் செய்தி தொடர்புசெயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், நமது ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக புகார் ஒன்றை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசு தலைவர் மாளிகையில் சமர்பித்துள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் செய்தி தொடர்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், நமது ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது, தமிழ்நாடு ஆளுவருக்கு எதிராக குடியரசு தலைவரிடம் புகார் அளித்தது ஏன்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாடு ஆளுநர் குறித்த ஒரு புகாரை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளார்கள். அதற்கு காரணம், தமிழ்நாடு ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கையிலேயே வைத்துள்ளார். காரணம் என்ன என்றும் சொல்ல மறுக்கிறார்.

 

மாநில சட்டப்பேரவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை. இங்கு இயற்கப்படும் தீர்மானங்களை, சட்டங்களை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர், தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதுமட்டும் இல்லாமல், பொதுவெளி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை, அரசியல்வாதி போல பேசுகிறார். மத அமைப்பின் சார்பாக பேசுகிறார்" என்றார்.

உயர் வகுப்பினுருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, பொருளாதார ரீதியாக வழங்கினால், சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கியவர்களின் இட ஒதுக்கீடு குறையும். எனவே, தான் மேல்முறையீடு செய்ய போகிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி கட்சிகள், தீர்ப்பை வரவேற்றுள்ளதே என கேள்வி எழுப்பியதற்கு, "எங்களுடைய நிலைபாட்டை அவர்களுக்கு விளக்கவோம். அவர்களுக்கு புரிய வைப்போம்" என்றார்.

இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 12ஆம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு" என்று கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் “செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்” நீதிபதி ரவீந்திர பட் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget