மேலும் அறிய

Chennai: சென்னையில் பிளாட்பார்மில் தூங்கிய நபர்.. மனைவியுடன் வந்து பணம் பறித்த இளைஞர்!

தன்னிடம் பணம் இல்லை என எவ்வளவோ சொல்லியும் நிர்மலை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அந்த மூன்று பேரில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே படுத்திருந்த நபரை தாக்கி பணப்பையை திருடிக் கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு விதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் எப்போதும் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்படும். இங்கு நோயாளிகளை அழைத்து வரும் குடும்பத்தினரில் சிலர் மருத்துவமனை வளாகம், அருகில் இருக்கும் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருப்பதும், தங்குவதும் வழக்கம். 

இந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை அருகில் உள்ள நடைபாதையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் என்பவர் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 ஆண்டுகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரும் அவரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என நிர்மல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அந்த 3 பேரும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிர்மலை விமர்சித்துள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என எவ்வளவோ சொல்லியும் நிர்மலை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அந்த மூன்று பேரில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆதார் அட்டை அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல் குமால் உடனடியாக புரசைவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் தூங்கிய பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். பின்னர் புரசைவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது. 

இதனடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி செம்மஞ்சேரியைச் சேர்ந்த பரமேஸ்வரன், வால் டாக்ஸ் சாலையில் நடைபாதையில் இருந்த ஜெகன், மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி பிரியா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரின் பணப்பையை போலீசார் மீட்டு நிர்மலிடம் ஒப்படைத்தனர். மிரட்ட பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரமேஸ்வரன் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொள்ளை, திருட்டு, மிரட்டி பணம் பறித்தல் என 16 வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. அவரது மனைவி பிரியா மீது கொலை உள்ளிட்ட 3 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget