மேலும் அறிய

Thiruvarur: சாலை விபத்தில் முளைச்சாவு: 3 மணிநேரத்தில் திருவாருர் - சென்னை பறந்த இதயம்... சோகத்திலும் நெகிழ்ச்சி!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம். திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் இதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மயிலாடுதுறையில் சாலை விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள்  தானம் செய்யப்பட்டன. மயிலாடுதுறையை சேர்ந்தவர்  ஐயப்பன் (35). இவர் கூலி வேலை செய்கிறார். இவருக்கு மனைவி வாசுகி மகன்கள் மாதேஷ் (9), தினேஷ் (5) ஆகியோர் உள்ளனர். ஐயப்பன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் மயிலாடுதுறையில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சையில் இருந்த ஐயப்பன், இன்று காலை மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதற்கான ஏற்பாடுகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. காவல்துறையையும், இணைத்துக் கொண்டு அதற்கான திட்டத்தை வகுத்தனர். அதன்படி இன்று மாலை 4.30 மணி  தொடங்கி 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஐயப்பனின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை  மேற்கொண்டனர்.

முதலாவதாக இருதயம், நுரையீரல் ஆகியவற்றை சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இந்த உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பாக போலீஸ் வாகனமும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு விரைந்து சென்றது. திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு 10 மணிக்கு   சென்னைக்கு விமான மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதுபோல் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 1 சிறுநீரகம், துரை வேலம்மாள் மருத்துவமனைக்கு கல்லீரல் தானமாக எடுத்துச் செல்லப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. 

ஐயப்பனின் குடும்பத்தினர் உடல் தானம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து, எந்தெந்த  தானம் செய்யப்படும் உறுப்புகள் தேவைப்படுகின்ற மருத்துவமனை  விபரங்களை அறிந்து, அதனை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், திருவாரூர் மாவட்ட காவல் துறையும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இணைந்து செயலாற்றி இருப்பது அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதியாக உயிரிழந்த ஐயப்பனின் உடலுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  ”திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்காக அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் செய்யப்பட்டு ஆறு நபர்கள் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ஐயப்பனின் குடும்பத்தினருக்கு பாராட்டுதலை  தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் இந்த அறுவை சிகிச்சை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் டெக்னீசியன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்" தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget