மேலும் அறிய

Thiruvarur: சாலை விபத்தில் முளைச்சாவு: 3 மணிநேரத்தில் திருவாருர் - சென்னை பறந்த இதயம்... சோகத்திலும் நெகிழ்ச்சி!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம். திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் இதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மயிலாடுதுறையில் சாலை விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள்  தானம் செய்யப்பட்டன. மயிலாடுதுறையை சேர்ந்தவர்  ஐயப்பன் (35). இவர் கூலி வேலை செய்கிறார். இவருக்கு மனைவி வாசுகி மகன்கள் மாதேஷ் (9), தினேஷ் (5) ஆகியோர் உள்ளனர். ஐயப்பன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் மயிலாடுதுறையில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சையில் இருந்த ஐயப்பன், இன்று காலை மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதற்கான ஏற்பாடுகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. காவல்துறையையும், இணைத்துக் கொண்டு அதற்கான திட்டத்தை வகுத்தனர். அதன்படி இன்று மாலை 4.30 மணி  தொடங்கி 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஐயப்பனின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை  மேற்கொண்டனர்.

முதலாவதாக இருதயம், நுரையீரல் ஆகியவற்றை சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இந்த உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பாக போலீஸ் வாகனமும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு விரைந்து சென்றது. திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு 10 மணிக்கு   சென்னைக்கு விமான மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதுபோல் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 1 சிறுநீரகம், துரை வேலம்மாள் மருத்துவமனைக்கு கல்லீரல் தானமாக எடுத்துச் செல்லப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. 

ஐயப்பனின் குடும்பத்தினர் உடல் தானம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து, எந்தெந்த  தானம் செய்யப்படும் உறுப்புகள் தேவைப்படுகின்ற மருத்துவமனை  விபரங்களை அறிந்து, அதனை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், திருவாரூர் மாவட்ட காவல் துறையும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இணைந்து செயலாற்றி இருப்பது அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதியாக உயிரிழந்த ஐயப்பனின் உடலுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  ”திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்காக அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் செய்யப்பட்டு ஆறு நபர்கள் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ஐயப்பனின் குடும்பத்தினருக்கு பாராட்டுதலை  தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் இந்த அறுவை சிகிச்சை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் டெக்னீசியன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்" தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
"திருவாரூரில் 3வது முறையாக பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆக வேண்டும்.." நிர்வாகிகளுக்கு அமைச்சர் கேஎன் நேரு உத்தரவு
Puducherry Election 2026 : இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை: ராகுல் காந்தி அதிரடி வாக்குறுதி!
Puducherry Election 2026 : இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை: ராகுல் காந்தி அதிரடி வாக்குறுதி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Embed widget