மேலும் அறிய

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர்  இலா. தியோடர் ராபின்சன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,    
கொரோனா பணியில்,சில மாவட்டங்களில் ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தி கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி , அவர்தம் உயிர் பயம் போக்கி ஆவணம் செய்து  கனிவுடன் பரிசிலிக்குமாறு கோரிக்கை வேண்டும்.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

மேலும், மக்களை  கொரோனா  பிடியிலிருந்து முற்றிலும் காப்பாற்றிடவும், பாதுகாத்திடவும், பல்வேறுபட்ட விரைவு  நடவடிக்கைகளை, தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலில்,
அமைச்சர் பெருமக்களும், அரசின் பல்வேறு துறை அலுவலர் பெருமக்களும், பம்பரம் போல் சுழன்று,  தமிழக மக்களை கொரோனா தொற்றின் பிடியிலிருந்து காப்பாற்றிட, முன்னெடுத்துவரும் அனைத்து செயல்பாடுகளையும் போற்றுவதோடு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அவர்களுக்கு  நன்றி பாராட்டுகிறது.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

இந்த கொரோனா தீவிர சூழலில், அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்து ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆசிரியர்களை  மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாக்கும் வகையில், சுயநல சிந்தனையுடன், சமூகசிந்தனையற்ற நிலையில், மற்றவர்களை விட தங்களைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், சில சமுக ஊடகங்களும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில விஷமிகளும், அரசுக்கும், மக்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனப்போக்கில் சில கும்பல்களும், கொரோனா களப்பணி சார்ந்து அரசுக்கான ஆலோசனை மற்றும் வேண்டுகோள் என்ற பெயரில், ஆசிரியர்கள் மீது, தங்கள் வன்மத்தை கொப்பளிக்கும் விதமாக, முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

தங்களது அறப்பணியால், தன்னையும் தங்களது குடும்பத்தையும், எழுத்தறிவித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்வித்து, தங்களை மட்டும், ஒருபோதும் உயர்த்திக்     கொள்ளாத ஆசிரியர்கள் மீது புறங்கூறியும் , சமுகத்தில் அவசியமற்றவர்களாக சித்தரித்து, அவர்களை சமுக நலனற்றவர்களாக அடையாளப்படுத்தியும், சிலர் சமுக வலைத்தளங்களிலும்  வெளிப்படுத்தி வருகின்றனர்.   

கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்  இந்த நிலையில், ஆசிரியர்கள் ஏதோ பணியே செய்யாமல் இருப்பதை போன்று பெரிதுபடுத்தி காட்டுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சமுக வலை தள பதிவீட்டாளர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிப்பதோடு, அரசின் பல்வேறு வகையான திட்டங்களையும்,    சமுதாய பணிகளையும்  கிராம, நகர, ஊரகப் பகுதிகளில் முழுமையாக கொண்டு சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் ஆசிரிய பெருமக்கள் என்பதனை நினைவூட்ட விரும்புகிறது.
 மேலும் ஆசிரிய பெருமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று, பணி அனுபவமும்,  கொரோனா முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய   பயிற்சியும் பெற்றவர்கள் அல்ல.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

இன்றைய சூழலில்  ஆசிரியர்களை கொரோனா களப்பணியில் கட்டாயப்படுத்தி களமிறக்குவது, ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதோடு , அவர்தம் குடும்பத்தில் பயத்தையும் குழப்பத்தையும் விளைவித்து அவர்தம் வாழ்வில், அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கிவிடும். ஆகவே  பள்ளிக்கல்வித்  துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், கொரோனா களப்பணியில் ஆசிரியர்களை பணிக்கு கட்டாயப்படுத்தாமல்,  விரும்புவோர்க்கு வாய்ப்பளித்து,  ஆசிரியர்களுக்கு உயிர் பயம் போக்கி, அமைதியையும் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்த ஆவண செய்ய வேண்டுமாறு,  தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள் வைத்தும், அதனை கனிவுடன் பரிசிலிக்குமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாகவும்.

மேலும் அரசுக்கும், மருத்துவப் பணியாற்றும் முன்களப்பணியாளர்களுக்கும் என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Embed widget