மேலும் அறிய

TASMAC : மதுபான சில்லறை விற்பனை கடைகளில், அதிக அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது : தமிழ்நாடு அரசு

மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள், மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படும் 27 மாவட்டங்களில் வரும்  ஜூன் 14 முதல் 21 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் லிமிடெட், சென்னை மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரைகளை தவறாது கடைபிடிக்குமாறு மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட நிலையான இயக்க நெறிமுறைகளில்: 

  • மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டுவரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணியில் இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கோவிட்.19 கொரானா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த (medically fit person and without any co-morbid condition) 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்கவரும் நபர்களின் கூட்டத்தை இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக்கூடாது.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் பொழுதும் மூடும் பொழுதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி (user friendly disinfectant liquid) கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு இரண்டு முறை தெளிக்கவேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்கள் நின்று வரிசையில் வருவதற்காக 1 அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் சுட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம் (TRIPLE LAYER MASK), ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை (disposable hand gloves) ஆகியவற்றினை பயன்படுத்தவேண்டும்.
  • குறைந்த பட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடையின் வெளிப்புறம் நின்று மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என்பதனை கண்காணிக்கவும் வேண்டும்.

TASMAC : மதுபான சில்லறை விற்பனை கடைகளில், அதிக அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது : தமிழ்நாடு அரசு

  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் நுழைவாயிலில் ஒரு பணியாளர் மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிட்டைசர் வழங்கிய பின்னர் மதுபான சில்லறை விற்பனைக் கடைக்குள் அனுமதிக்கும் பணியினை கட்டாயம் செய்யவேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிட்டைசர் வழங்கும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம் (TRIPLE LAYER MASK), ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை (disposabie hand gloves) ஆகியவற்றினை பயன்படுத்தவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது (No Bulk Sales to be done).
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5.00 மணிக்குள் முடித்திருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையின்பொழுது சமூக ஆர்வலர்களை பணிக்கு (VOLUNTEERS) பயத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tasmac Shops in Tamil Nadu: ‛ஆட்சி மாறியும் காட்சி மாறலயே’ டாஸ்மாக் திறப்புக்கு ராமதாஸ் கண்டனம்

”மேற்கண்ட அறிவுரைகளை சரியாக பின்பற்றாமலும், பணிக்கு வராமலும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tasmac Shop Opening: டாஸ்மாக் திறந்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Embed widget