மேலும் அறிய

Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு இன்று முதல் வரும் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கீழே காணலாம்.

   கேள்வி : தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா?

   பதில்     :  தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் 28-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

   கேள்வி : புதிய ஊரடங்கு எவ்வாறு அமல்படுத்தப்பட உளளது?

   பதில் : தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

   கேள்வி : எந்தெந்த மாவட்டங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

   பதில் : கொரோனா பாதிப்பு ஏற்கனவே அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், தொற்று பாதிப்பு     ஓரளவு குறைவாக உள்ள 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாகவும், தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள 4           மாவட்டங்கள் மூன்றாவது வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

    கேள்வி : முதல் வகை மாவட்டங்கள் எவை?

    பதில் :  கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

    கேள்வி : இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் எவை?

    பதில் : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை,     பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்களை, தேனி, தென்காசி, திருநெல்வேலி,   திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடில திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்.


Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

   கேள்வி : எந்த மாவட்டங்கள் மூன்றாவது வகையில் உள்ளது?

     பதில் : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

  கேள்வி : முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உள்ளதா?

    பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு எந்தவித புதிய தளர்வுகளும் இல்லை. ஏற்கனவே     உள்ள அதே கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர உள்ளது.

   கேள்வி : இரண்டாவது வகை மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உண்டா?

     பதில் : வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல   அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2       பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

    கேள்வி : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எவற்றுக்கு அனுமதி?

     பதில் : குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,   ஆதரவற்றோர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவு இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கண்காணிப்பு/ பராமரிப்பு, சீர்த்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர். 


Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

    கேள்வி : போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?

    பதில் : மூன்றாவது வகை மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி : சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமா?

பதில் : ஆம். சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் நலன் கருதி காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

கேள்வி : சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு முறை உண்டா?

பதில் : வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். 


Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

கேள்வி : திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி உண்டா?

பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இ-பதிவு மாவட்ட நிர்வாகங்களால் வழங்கப்படாது. இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் மற்றும் மூன்றாவது வகையில் உள்ள 4 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : சுற்றுலா தளங்கள் செல்ல இ-பதிவு வழங்கப்படுமா?

பதில் : நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு வழங்க அனுமதிக்கப்படும்.

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI vs PBKS Qualifier 2: 204 ரன்கள் டார்கெட்.. பார்ஸ்டோ, திலக், சூர்யா கலக்கல் பேட்டிங்! இறுதிப்போட்டிக்கு செல்லுமா பஞ்சாப்?
IPL MI vs PBKS Qualifier 2: 204 ரன்கள் டார்கெட்.. பார்ஸ்டோ, திலக், சூர்யா கலக்கல் பேட்டிங்! இறுதிப்போட்டிக்கு செல்லுமா பஞ்சாப்?
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI vs PBKS Qualifier 2: 204 ரன்கள் டார்கெட்.. பார்ஸ்டோ, திலக், சூர்யா கலக்கல் பேட்டிங்! இறுதிப்போட்டிக்கு செல்லுமா பஞ்சாப்?
IPL MI vs PBKS Qualifier 2: 204 ரன்கள் டார்கெட்.. பார்ஸ்டோ, திலக், சூர்யா கலக்கல் பேட்டிங்! இறுதிப்போட்டிக்கு செல்லுமா பஞ்சாப்?
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Embed widget