தமிழக அரசு அதிரடி: செஞ்சியில் ₹85 கோடியில் நான்கு வழிச்சாலை! பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் ஆற்காடு சாலை வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் ஆற்காடு சாலை வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் ஆற்காடு சாலை விரிவாக்கம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் ஆற்காடு சாலை வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று (04.03.2026) துவக்கி வைத்தார். உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திடும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் -ஆற்காடு சாலை, செஞ்சி முதல் மட்டப்பாறை வரை 13.47 கி.மீ நீளத்திற்கு இரு வழி சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக ரூ.ரூ.85 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனம் திட்டத்தின் கீழ் ரூ.5.79 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கூட்டரங்கம் அறை, ஆய்வுக்கூட்டம் அறை, ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டரங்கம் மற்றும் பொறியாளர்கள் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படுவதையும், கர்பிணி தாய்மார்களுக்கு எடை மற்றும் சத்து குறைபாடு உள்ளவர்களை பரிசோதனை செய்யப்படுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. சத்து குறைபாடு உள்ள மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் வணிக வரி மற்றும் பதிவு துறை சார்பில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளம் கூடிய புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டடப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 08 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800 வீதம் ரூ.8,14,400 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.























