மேலும் அறிய

ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. டிராபிக் குறையுமா?

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் அனைத்தையும் 2025 மார்ச் இறுதிக்குள்ளும் கிழக்குக் கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணியினை 2025 மார்ச் மாதத்திற்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர அலகின் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப்பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (22.11.2024) கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் இறங்கிய அமைச்சர்:

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சாலை மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயினை கடப்பதற்குத் தேவையான பாலங்கள், ரயில்வே கடவு பாலங்கள் தேவைப்படுகின்றன.

இவற்றின் சில பணிகள் நெடுஞ்சாலைத்துறை சென்னை பெருநகர அலகினால் செயலாக்கப்பட்டு வருகின்றன. ரூ.50 கோடிக்கு மேல் உள்ள 16 பணிகளின் மொத்த மதிப்பு ரூ.2375 கோடி. இதற்கான நில எடுப்பு பணிகள் அனைத்தும் துவங்கப் பெற்று பல்வேறு நிலைகளில் உள்ளன.

நில எடுப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் பல்வேறு திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு வந்து சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் வருவாய்த்துறை மற்றும் நில எடுப்பு அலுவலர்கள் உதவியுடன் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ECR அகலப்படுத்தும் பணி:

இது தவிர பெருங்களத்தூர் ரயில்வே பாலப் பணியில் உள்ள மீதமுள்ள பணிகள் வனத்துறை, மின்சார வாரியம் அனுமதிகளைப் பெற்று துவங்க வேண்டும் என்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் அனைத்தையும் 2025 மார்ச் இறுதிக்குள்ளும் கிழக்குக் கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணியினையும் 2025 மார்ச் மாதத்திற்குள்ளும் மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பல்வழிச் சாலை மேம்பாலத்தினை 2025 மே மாதத்திலும், பாடி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை 2025 டிசம்பர் இறுதிக்குள்ளும், குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப் பாலம் இன்னும் நிறைவு பெறவில்லை.

இப்பணியை டிசம்பர் 2024 முடிக்க வேண்டும் என்றும், வேப்பம்பட்டு மற்றும் விம்கோ நகர் ரயில்வே மேம்பாலப் பணி, மடிப்பாக்கம் சுரங்கப் பாலம், கொட்டிவாக்கம் கிராமத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி போன்ற அனைத்துப் பணிகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து பொறியாளர்களுக்கும், ஓப்பந்ததாரர்களுக்கும் விரைந்து முடிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலக் கெடுவிற்குள் அனைத்து பணிகளையும் தரமுடன் செயலாக்கிட வேண்டும் என்று அமைச்சர் உத்திரவிட்டார்.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலரையும் பங்கேற்க செய்து அவர்களுடைய கருத்தினையும் கேட்டறிந்து, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் பணிகளில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வருவதற்கு, பிற சேவை துறைகளான வருவாய்த்துறை, மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையின் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் உரிய காலத்திற்குள் சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.

 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget