மேலும் அறிய

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

Elephant Population In Tamilnadu: தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டைவிட 100 அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Elephant Census 2024: காடுகளை வளர்ப்பதிலும், காடுகளின் வளத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசாங்கமானது யானைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய கணக்கெடுப்பில் யானைகள் எண்ணிக்கையானது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 

யானைகள் கணக்கெடுப்பு:

கடந்த மே மாதம் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு யானைகள் கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கையானது 100 அதிகரித்து சுமார் 3,063 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இருக்கும் 26 வன மண்டலங்களில் நீலகிரி யானைகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளான உதகை, மசினகுடி, கூடலூர், ஹாசனூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

இதில் , கோவை மற்றும் நீலகிரி பகுதிகள் 70 முதல் 80 சதவிகிதம் யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

யானைகள் வாழ்விடம்:

தமிழ்நாட்டில் 17, 737 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8,989 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் வாழ்விடமாக உள்ளது. 

நீலகிரியில் 4, 662 சதுர கி.மீ பரப்பளவில் 2,253 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கோவையில் 566 சதுர கி.மீ பரப்பளவில் 323 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனைமலை 1,457 சதுர கி.மீ பரப்பளவில் 310 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில்  1,249 சதுர கி.மீ பரப்பளவில் 2,27 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அகத்தியர் மலையில் 1, 197 சதுர கி.மீ பரப்பளவில் 259 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள்:

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

2017 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 761

2023ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 961

2024 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 3,063

 

இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளால் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில இடங்களில் ரயில் விபத்துகளால் உயிர் இழப்பதும், விவசாய தோட்டங்களில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பையும் தடுக்கும் பட்சத்தில் , மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Also Read: Chennai Tourist Places: தலைநகரம்னா சும்மாவா..! சென்னையில் சுற்றிபார்க்க குவிந்துள்ள சுற்றுலாத் தலங்கள், பீச் டூ மால்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget