![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anbil Mahesh Poyyamozhi: தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வானார் அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
![Anbil Mahesh Poyyamozhi: தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வானார் அமைச்சர் அன்பில் மகேஸ் Tamil Nadu Education Minister Anbil Mahesh Poyyamozhi elected as president of TN Scouts and Guides Anbil Mahesh Poyyamozhi: தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வானார் அமைச்சர் அன்பில் மகேஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/26/1233973eba4e52538b3df6d9a21c535d1661509452448224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2021, மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தி.மு.க பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதான தனது பார்வையை செலுத்த தொடங்கியது. கடந்த பல ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கும் விழா நடத்தப்படாமலே இருந்தது. இந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்த முதல் சுதந்திர தின விழாவிலேயே அமைச்சர் அன்பில் மகேஸ் சாரண இயக்கத்தினருக்கு விருதுகளை வழங்கினார்.
எப்போதும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழேதான் செயல்படும். அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் கடந்த ஆட்சியில் இப்பொறுப்பை அ.தி.மு.க விட்டுக்கொடுத்தது. கடந்த ஆட்சியில் சில காலம் சாரண இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜா பதவி வகித்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு நடந்த சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைவர் போட்டியில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தார்.
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இயக்கத்தின் தலைமையகத்தில் கொடியேற்றி விழாக்களிலும் கலந்துகொண்டார். இதையடுத்து பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கும் நடவடிக்கை நடந்தது.
இதை தொடர்ந்து அதற்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு அளிக்காத காரணத்தால் அன்னபோஸ்ட்டாக அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதற்கான அறிவிப்பை தற்போது பாரத சாரண சாரணியர் இயக்கம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாவலர் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்குப் பிறகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி தொடர்பாக, ‘முதலில் என்மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும்’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)