மேலும் அறிய

Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

கொரோனா இரண்டாம் அலையின் கடினமான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைவதாக கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்வீட் செய்துள்ளார்

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் கொடூரமாக உள்ளது. மருத்துவமனைகளில் வாசலில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் காத்துக்கிடக்கின்றன. வட மாநிலங்களில் எரியூட்டுவதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி கொத்துக் கொத்தாக மடிகின்றனர். 


Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

வடமாநிலங்களில் தொடங்கிய ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது தமிழகத்திலும் தலைவிரித்தாடுகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு  அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரே இரவில் 11 பேர் பலி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபடுகின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 


Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் கடினமான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைவதாக கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா இரண்டாம் அலையின் இக்கட்டான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மட்டுமே உங்கள் கவலையாக இருக்க வேண்டும். இன்றும் மாஸ்க் போடாமல் இருப்பது, சமூக இடைவெளி இல்லாதது போன்ற கவனக்குறைவு எனக்கு ஏமாற்றத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார். 

 

தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நாளை காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் கொரோனாவின் தாக்கம் இருக்குமென்பதால் அரசின் அடுத்தக்கப்பட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மருத்துவரின் இந்த எச்சரிக்கை பதிவை வைத்து பார்க்கும் போது, அடுத்த இரண்டு மாதத்திற்கு மோசமான சூழல் நிலவலாம் என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
நெல்லையில் அதிர்ச்சி.. பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!
நெல்லையில் அதிர்ச்சி.. பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Embed widget