மேலும் அறிய

சென்னை கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் நிறுத்தம்..

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நாளை முதல் நேரடி மனுத்தாக்கல் முறை நிறுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்று முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனாவின் தாக்கம் இருந்தபோதும் உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் காணொலி காட்சி மூலமாகவே நடைபெற்றது. பின்னர், கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் உள்பட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைகள் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


சென்னை கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் நிறுத்தம்..

சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக மனு தாக்கல் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்காக நீதிமன்றத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மனுக்களை இடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரடி விசாரணைக்கு, மூன்று நாட்களுக்கு முன் முறையாக விண்ணப்பித்து அனுமதிபெற வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அனைத்தும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்படும். நீதிமன்றத்திற்கு வருவதற்கான முறையான அனுமதி சீட்டு இல்லாமல் யாருக்கும் அனுமதியில்லை. நீதிமன்றத்திற்குள் முறையாக அனுமதி பெற்று உள்ளே வரும் நபர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் உள்பட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்புடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நாளை முதல் உடனடியாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட உள்ளது என்று நீதிபதி ஆர். செல்வகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அமலில் இருந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 986 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில 3 ஆயிரத்து 711 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget