மேலும் அறிய

சென்னை கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் நிறுத்தம்..

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நாளை முதல் நேரடி மனுத்தாக்கல் முறை நிறுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்று முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனாவின் தாக்கம் இருந்தபோதும் உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் காணொலி காட்சி மூலமாகவே நடைபெற்றது. பின்னர், கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் உள்பட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைகள் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


சென்னை கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் நிறுத்தம்..

சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக மனு தாக்கல் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்காக நீதிமன்றத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மனுக்களை இடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரடி விசாரணைக்கு, மூன்று நாட்களுக்கு முன் முறையாக விண்ணப்பித்து அனுமதிபெற வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அனைத்தும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்படும். நீதிமன்றத்திற்கு வருவதற்கான முறையான அனுமதி சீட்டு இல்லாமல் யாருக்கும் அனுமதியில்லை. நீதிமன்றத்திற்குள் முறையாக அனுமதி பெற்று உள்ளே வரும் நபர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் உள்பட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்புடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நாளை முதல் உடனடியாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட உள்ளது என்று நீதிபதி ஆர். செல்வகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அமலில் இருந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 986 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில 3 ஆயிரத்து 711 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TRB Rajaa slams Annamalai : ”நான் என்ன ஈசலா? அண்ணாமலையை விளாசும் TRB ராஜாGaneshamurthi Death : ஈரோடு மதிமுக MP கணேசமூர்த்தி காலமானார்SP Velumani : ”அ.மலை பத்தி கவலை இல்லபாஜக கணக்குலயே இல்ல” SP வேலுமணி ஆவேசம்Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Breaking LIVE : இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார்
Lok Sabha Election 2024: கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
Tax Deduction: 80C விடுங்க, ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டிருந்தா ரூ.75,000 வரை வரி விலக்கு..! கூடுதல் விவரங்கள் உள்ளே
Tax Deduction: 80C விடுங்க, ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டிருந்தா ரூ.75,000 வரை வரி விலக்கு..! கூடுதல் விவரங்கள் உள்ளே
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
Vivek Daughter Marriage: தந்தையின் வழியில் மகள்.. திருமணம் முடிந்த கையோடு மரம் நட்டுவைத்த விவேக் மகள் - மருமகன்..!
தந்தையின் வழியில் மகள்.. திருமணம் முடிந்த கையோடு மரம் நட்டுவைத்த விவேக் மகள் - மருமகன்..!
Embed widget