மேலும் அறிய

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, வரும் 11-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு நல உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி இரு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபா தான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, திருப்போரூர் காவல் நிலைய காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடந்தபோது ஆசிரமத்தில் சிவசங்கர் பாபா இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதுவதால், வரும் 11-ஆம் தேதிக்குள் இந்த புகார் குறித்த விரிவான விசாரணைக்கு சிவசங்கர் பாபா நேரில் ஆஜராக வேண்டும் என்று இன்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிவசங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம் என்று தன்னுடைய பெயரை சிவசங்கர் பாபா என்று மாற்றி வைத்துக் கொண்டார். பின்னர், தன்னுடைய பக்தர்கள் இருவர் இலவசமாக வழங்கிய இடத்தில்தான் இந்த பள்ளியை கட்டி நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, சிவசங்கர் பாபா அங்கு பயிலும் மாணவிகள் அனைவரையும் கடந்த ஜென்மத்தில் நீங்கள் எல்லாம் கோபிகைகளாக பிறந்தீர்கள் என்று மூளைச்சலவை செய்து பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாகவும், வெளிநாடு சென்றால்கூட சிறுமிகளை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளியான நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக சென்னையில் மேலும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் விரைவில் பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரபல பாடகி சின்மயி டுவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Karunanidhi birthday: ‛மறையவில்லை... மறைந்திருந்து பார்க்கிறீர்கள்’ கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் உருக்கம்!

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget