மேலும் அறிய

ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை நடைமுறைக்கு கொண்டுவர கோரிக்கை

மொத்தம் 13 தளங்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆண்டிற்கு சுமார் 36 மில்லியன் டன் சரக்குகள்  கையாளப்படுகிறது. 8 லட்சம் பெட்டகங்களை கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கையாண்டுள்ளது.       

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி துறைமுகத்தில் 7500 கோடி மதிப்பீட்டில் 1000 கோடி மதிப்பில் புதிதாக கப்பல் கட்டும் தளம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்பு குறித்து, தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் தெரிவித்து இருந்தது.
 
இதனை தொடர்ந்து கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியது. காயல்பட்டிணம் வடபாகம், வைப்பாறு மற்றும் பழைய காயல் உள்ளிட்ட பகுதிகள் கப்பல் கட்டும் தளத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்திருந்ததுடன், மத்திய கப்பல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இடத்தினை தேர்வு செய்வார்கள் என தெரிவித்து இருந்தார். 
 
 
தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி என்பது துறைமுக வளர்ச்சியினை மையமாக கொண்டு அமைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்  மூலம் தற்போது சுமார் 2,500  மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 
ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை நடைமுறைக்கு கொண்டுவர கோரிக்கை
 
இதற்காக  இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யபப்டுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு  சுமார் 1900 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து வரும் நிலையில் துறைமுகத்திற்கு கப்பல்கட்டும் தளமும் அமையுமானால் கூடுதலாக நன்மை வருவாயும் அன்னிய செலவாணியும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக துறைமுக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை நடைமுறைக்கு கொண்டுவர கோரிக்கை
 
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துவக்கத்தில் இரண்டு தளமாக இருந்தது தற்போது சரக்குப்பெட்டகம் கையாளுவதற்காகவே தனியார் வசம் இரண்டு தளங்களும், ஸ்பிக், அனல்மின் நிலையம்  உள்ளிட்ட ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கையாளப்படும் வகையிலும் அரசு மற்றும் தனியார் ஆலைகளுக்கு தேவையான நிலக்கரியினை கையாள்வதற்காகவும் மொத்தம் 13 தளங்கள் உள்ளன. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டிற்கு சுமார் 36 மில்லியன் டன் சரக்குகள்  கையாளப்படுகிறது. இதேபோல் 8 லட்சம் சரக்கு பெட்டகங்களை கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கையாண்டுள்ளது. 
      
தூத்துக்குடி துறைமுகம் வரும் கப்பல்களை தளத்தில் நிறுத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையிலான இழுவை கப்பல்கள் மூலம் கப்பல்கள் தளத்திற்கு கொண்டு வரப்படுகிறது.  துறைமுகம் வரும் கப்பல்களில் பழுது ஏற்பட்டால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அன்னிய செலவாணி பாதிக்கப்படுகிறது,
 
ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை நடைமுறைக்கு கொண்டுவர கோரிக்கை
 
ஆண்டுதோறும் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் கப்பல் பழுது பார்க்கும் தளமும் ஏற்படும் என்பதால் விரைவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வேண்டும் என்பதே துறைமுக உபயோகிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மட்டும் வித்திடாமல் ஒட்டுமொத்த தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை நடைமுறைக்கு கொண்டுவர கோரிக்கை
 
ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் புதிய ஆலைகள் ஏதும் அமைக்கப்படாத நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் அதை சார்ந்த சிறுகுறு தொழிற்சாலைகள் வரும் என்கின்றனர். அதே நேரத்தில்  தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்க அரசை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும் என்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய அலர்ட்: இன்று வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?
காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய அலர்ட்: இன்று வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?
பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!
பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget