மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் இடம் மீட்பு

மயிலாடுதுறையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கிய சாக்கு மண்டி குடோனை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்தர்காடு திருஞானசம்பந்தர் ஆலயத்தின் உபகோயிலான மயிலாடுதுறை காவேரி நகர் சக்திமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 1728 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் ஒன்று காவேரி நகர் பகுதியில் அமைந்துள்ளது. கோவிந்தன் என்ற தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி சாக்கு குடோனாக உபயோகித்து வந்தார். 


மயிலாடுதுறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் இடம் மீட்பு

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றது.  அந்த கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாத நிலையில் இதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த தனிநபரிடம் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விசாரணை நடத்தி அந்த நபரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆக்கிரமிப்பு இடம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சாக்கு கிடங்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

Karthi Meets Vijayakanth: விஜயகாந்த்தை சந்தித்த நடிகர் கார்த்தி... வெளியில் வந்து சொன்னதை கேளுங்க!


மயிலாடுதுறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் இடம் மீட்பு

முறையான முன் அறிவிப்பு ஏதும் வழங்காமல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்து சென்றனர். மேலும் இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி


விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார்.

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிட விடுதலைக் கழகத்தினர் புகார் மனு ஒன்று அளித்தனர். அம்மனுவில் கடந்த 19.08.2022 அன்று ஓசூரில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வட தமிழக மாநில அமைப்புச் செயலாளர் சு.வே.ராமன், எங்கெல்லாம் பெரியாரின் சிலைகள் இருக்கின்றதோ அனைத்து சிலைகளையும் உடைப்போம், நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம் என நினைக்காதீர்கள் எப்படி 1992 டிசம்பர் 6 -ல் அயோத்தியில் பாபர் மசூதி நாள் குறிப்பிட்டு உடைக்கப்பட்டதோ, அதுபோல பெரியார் சிலையை உடைப்போம் என்று பேசியுள்ளார். 


மயிலாடுதுறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் இடம் மீட்பு

இது இரு சமூகத்தினரிடையே பதட்டத்தை உருவாக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைககளை ஏற்படுத்தும், பொது அமைதியை சீர்குலைக்கும். ஆகையால், அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற திட்டமிடும் சு.வே.ராமனை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கு ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கு ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Israel Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS | Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கு ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கு ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!
போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!
Gold Recovered: யப்பா, ஏர் இந்தியா விமான இடிபாடுகள்ல இருந்து இவ்ளோ தங்க நகைகள் மீட்பா.?!! அத என்ன பண்ணாங்க தெரியுமா.?
யப்பா, ஏர் இந்தியா விமான இடிபாடுகள்ல இருந்து இவ்ளோ தங்க நகைகள் மீட்பா.?!! அத என்ன பண்ணாங்க தெரியுமா.?
Embed widget