மேலும் அறிய

'கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’ இதற்கும் அணில்தான் காரணமா ?

மின்சாரத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்சாரத் தடையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் இன்றும், நகரின் முக்கிய பகுதிகளான வடிவேல் நகர், பஜார் தெரு, சுக்காலியூர், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, பாகநத்தம், புலியூர், சோமூர், ஒத்தக்கடை, அர்த்தம் பட்டி, குழந்தை பட்டி, பஞ்சப்பட்டி, சிங்கம்பட்டி, கோரிபாளையம், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சாரத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இதுபோன்ற மின்வெட்டுகள் தொடர்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’  இதற்கும் அணில்தான் காரணமா ?

மின் தடை என்பது எப்போது ஏற்படும், எந்த நாளில் எவ்வளவு மணி நேரம் ஏற்படும் என்ற நிலையான தகவல் இல்லாததால் அப்பகுதியினர் குழம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்று கூறினாலும், வாரத்தில் பல நாட்களில் இப்படி பராமரிப்பு பணி என்று கூறி மின்சாரத்தை தடை செய்வதால், ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் தெரிவுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், 19ஆம் தேதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெறும் என்றும் இதனால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்திருந்தார். பின்னர், பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு, மின் கம்பிகளில் அருகே இருக்கும் மரங்கள், செடிகொடிகள் வளர்ந்து கம்பிகளில் மோதும்போதும், அதனூடாக அணில்கள் செல்வதால் மின்சாரம் தடைபடுகிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆனது.


கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’  இதற்கும் அணில்தான் காரணமா ?

 

இதனால், அணிலோடு அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒப்பிட்டு பலரும் ட்வீட் போட்டிருந்தனர். அணிலால் மின் தடை ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பது குறித்து பெரிய விவாதமே அங்கு சென்றுக்கொண்டிருக்கும் சூழலில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக மறுத்துள்ளார்.

ஆனால்,  உண்மையில் அணில்களால் உலகம் முழுவதும் மின்சாரம் தடை தடைப்பட்டு வருவது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர். https://tamil.abplive.com/news/tamil-nadu/electrical-disruptions-power-outages-caused-by-squirrels-common-as-claimed-by-senthil-balaji-7084

பல இடங்களில் ஒரே நேரத்தில் மின்சார தடை என்ற தொடர் குற்றச்சாட்டு வந்ததால், முதல்வரின் உத்தரவிற்கிணங்க பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்போது மின்சாரத் தேவை என்பது மிகவும் தேவைப்படுவதால், சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கூட பொதுமக்கள் துடிதுடித்து போய்விடுகின்றனர். எனவே ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
Embed widget