மேலும் அறிய

'கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’ இதற்கும் அணில்தான் காரணமா ?

மின்சாரத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்சாரத் தடையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் இன்றும், நகரின் முக்கிய பகுதிகளான வடிவேல் நகர், பஜார் தெரு, சுக்காலியூர், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, பாகநத்தம், புலியூர், சோமூர், ஒத்தக்கடை, அர்த்தம் பட்டி, குழந்தை பட்டி, பஞ்சப்பட்டி, சிங்கம்பட்டி, கோரிபாளையம், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சாரத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இதுபோன்ற மின்வெட்டுகள் தொடர்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’ இதற்கும் அணில்தான் காரணமா ?

மின் தடை என்பது எப்போது ஏற்படும், எந்த நாளில் எவ்வளவு மணி நேரம் ஏற்படும் என்ற நிலையான தகவல் இல்லாததால் அப்பகுதியினர் குழம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்று கூறினாலும், வாரத்தில் பல நாட்களில் இப்படி பராமரிப்பு பணி என்று கூறி மின்சாரத்தை தடை செய்வதால், ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் தெரிவுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், 19ஆம் தேதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெறும் என்றும் இதனால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்திருந்தார். பின்னர், பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு, மின் கம்பிகளில் அருகே இருக்கும் மரங்கள், செடிகொடிகள் வளர்ந்து கம்பிகளில் மோதும்போதும், அதனூடாக அணில்கள் செல்வதால் மின்சாரம் தடைபடுகிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆனது.


கரூர் மாவட்டத்தில் தொடரும் மின் தடை’ இதற்கும் அணில்தான் காரணமா ?

 

இதனால், அணிலோடு அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒப்பிட்டு பலரும் ட்வீட் போட்டிருந்தனர். அணிலால் மின் தடை ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பது குறித்து பெரிய விவாதமே அங்கு சென்றுக்கொண்டிருக்கும் சூழலில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக மறுத்துள்ளார்.

ஆனால்,  உண்மையில் அணில்களால் உலகம் முழுவதும் மின்சாரம் தடை தடைப்பட்டு வருவது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர். https://tamil.abplive.com/news/tamil-nadu/electrical-disruptions-power-outages-caused-by-squirrels-common-as-claimed-by-senthil-balaji-7084

பல இடங்களில் ஒரே நேரத்தில் மின்சார தடை என்ற தொடர் குற்றச்சாட்டு வந்ததால், முதல்வரின் உத்தரவிற்கிணங்க பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்போது மின்சாரத் தேவை என்பது மிகவும் தேவைப்படுவதால், சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கூட பொதுமக்கள் துடிதுடித்து போய்விடுகின்றனர். எனவே ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget