மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Power Cut Tamilnadu : அணில்களால் மின் தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது உண்மையா?

அணில்களால் எத்தனை மின் தடை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்ற சரியான தகவல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இல்லை

கடந்த இரண்டு நாள்களாக அணில்கள் தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியுள்ளன. காரணம் தமிழ்நாடு முழுக்க அடிக்கடி ஏற்படும் மின் தடை. 2 நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் நெருங்கியதை மனதில் கொண்டு, டிசம்பர் மாதத்துக்கு பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டனர். சில இடங்களில் மரங்கள் இருக்கும், செடிகள் வளர்ந்திருக்கும், இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும். இதனால் உரிய இடங்களை கண்டறிந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.  சில இடங்களில் மரங்கள் வளர்ந்து அதன் மூலம் அணில்கள் கம்பியில் ஓடுகின்றன, அவ்வாறு ஓடும் போது இரண்டு கம்பிகள் ஒன்றாகி அதனால் மின்சாரம் தடை படுகிறது” என்றார்.


Power Cut Tamilnadu : அணில்களால் மின் தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது உண்மையா?

மேலும் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக மக்கள் புகார் தெரிவிக்கலாம், இரவு நேரங்களிலும் கூட மக்களின் குறைகளை கேட்டு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்” எனவும் செந்தில் பாலாஜி கூறினார். அமைச்சர் பேசி முடித்ததில் இருந்து அணில்தான் காரணம், அமைச்சர் இல்லை என அவரை கலாய்க்க தொடங்கினர் இணையதள வாசிகள். அதோடு அதிமுகவினரும் இதுதான் சரியான சான்ஸ் என மீம்ஸ்கள் பறக்க விட்டு வருகின்றனர்.

அமைச்சரின் பேச்சும் அணில்கள் பற்றிய கூற்றும் உண்மையா, அதற்கு வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தோம். உலகில் மின் தடை ஏற்படுத்தும் மிக அழகான உயிரினம் அணில் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்திருந்தனர். அணில்களை பொருத்தவரை மின் ஒயர்களை பற்களால் கடித்து மின்சாரத் தடையை உண்டாக்க முடியும். அணில்களின் பற்கள் வாழ்நாள் முழுக்க வளரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதே போல் இரண்டு மின் கடத்திகளாக செயல்படும் மின்சார கம்பிகளை பாலமாக பிடித்துக் கொள்ள அணில் முயலும் போது மின் தடை ஏற்படலாம். இதனால் அணில்கள் இறக்கவும் செய்கின்றன.


Power Cut Tamilnadu : அணில்களால் மின் தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது உண்மையா?

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது இரண்டாம் வகை மின் தடை. மின்சாரக் கம்பிகள் மேல் ஊர்ந்து செல்லும் அணில்கள் மற்றொரு கம்பியை தாவுவதற்காக பயன்படுத்த நினைத்து அந்த கம்பியை பிடிக்கும். அப்போது இரண்டு கால்களில் இரு கம்பியையும் அடுத்த இரண்டு கால்களில் மற்றொரு கம்பியையும் பிடிக்கும். அப்படி பிடிக்கும் போது இரண்டு கம்பியும் வெவ்வேறு மின்னோட்டம் கொண்டதாக இருந்தால் கண்டிப்பாக மின் தடைக்கு வாய்ப்புண்டு. ஆனால் இது உடனே சரி செய்யக் கூடியதாகத்தான் இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அணில்கள் மூலம் மின் தடை ஏற்படும் நிகழ்வு உலகம் முழுக்கவே நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 2 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபட்டது. சுமார் 45 ஆயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் என அப்போது செய்தி வெளியாகி இருந்தது. இதே போல் நியூ ஜெர்சி நகரத்திலும் இரண்டு கம்பிகளுக்கு இடையே பயணிக்க முயன்ற அணிலால் மின் தடை ஏற்பட்டது. காலை 9 மணிக்கு ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய 12 மணி ஆனது. அமெரிக்காவில் நடக்கும் மின் தடையில் 20% மின் தடைக்கு அணில்கள் காரணம் என அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.


Power Cut Tamilnadu : அணில்களால் மின் தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது உண்மையா?

அதே நேரத்தில் அணில்களால் ஏற்படும் அதிகப்படியான மின் தடை சம்பவங்கள்  வனப்பகுதிகளில் ஏற்படுகின்றன. ஏனெனில் அங்கு அதிகப்படியான அணில்கள் வாழ்கின்றன. அதே நேரத்தில் அணில்கள் இருக்கும் பகுதிகளில் மின் தடைக்கு கண்டிப்பாக அவை காரணமாகின்றன. மின்சேவை நிறுவனங்கள் இதனை மனதில் கொண்டே மின்கம்பிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும் கையாளுகின்றன. குறிப்பாக Insulation எனப்படும் பிளாஸ்டிக் பாதுகாப்பை அதிகப்படுத்துகின்றன. மின்கம்பி செல்லும் பாதையில் எந்த மரமோ செடிகளோ தொடர்பு கொள்ளா வகையில் பராமரிப்பு செய்கின்றனர். கேட்பதற்கு இதெல்லாம் நடக்குமா என தோன்றினாலும் இதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதே உண்மை. அதே நேரத்தில் அணில்களால் எத்தனை மின் தடை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்ற சரியான தகவல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இல்லை. ஆனால் காரணத்தை வாரியம் உறுதி செய்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போதும் சில இடங்களில் ஏற்படும் மின் தடைக்கு அணில்களின் இத்தகைய செயல்கள் காரணம் என்றார். ஒட்டுமொத்த மின் தடைக்கும் அணில்களே காரணம் என சொல்லவில்லை. அதனால் அணில்களிடம் உஷாராக இருங்கள். அவை அழகும் ஆபத்தும் நிறைந்தவை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடிKangana Ranaut : கங்கனாவை அலறவிட்டவர்! யார் இந்த குல்விந்தர் கவுர்?Annamalai vs Tamilisai | NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Breaking News LIVE:  பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி 
Breaking News LIVE: பாஜக மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி 
Haraa Movie Review: 14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
Haraa Movie Review: 14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
TN Headlines: நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
Embed widget