மேலும் அறிய

OPS on Jayalalitha: எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ்: தர்மயுத்தத்தில் பேசியது இதுதான்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் பல விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் பல விவரங்களைத் தெரிவித்துள்ளார். அவர் இன்று தெரிவித்துள்ளதையும் தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியதையும் சற்றே ஒப்பிட்டு பார்க்கலாம்.

இன்று அவர் கூறியவை:

* கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. உதவியாளர் சொல்லித்தான் எனக்கு அந்த விஷயமே தெரியவந்தது 
*  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தான் நான் அவ்வப்போது தெரிந்துகொண்டேன்.
* ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்ததைத் தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
* ஜெயலலிதா மருத்துவமனையில் நடத்திய காவிரிக் கூட்டம் குறித்து எனக்குத் தெரியாது. 
*ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயலலிதாவிற்கு இதயபாதிப்பு ஏற்பட்டது பற்றி விஜயபாஸ்கர் கூறினார்.
* இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்ப்டடது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
* பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன்.

இவைதான் ஓபிஎஸ் இன்று ஆணையத்தில் தெரிவித்தவற்றில் ஹைலைட்.


OPS on Jayalalitha: எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ்: தர்மயுத்தத்தில் பேசியது இதுதான்!

அன்று அவர் பேசியவை..

இதே ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிப்ரவரி 2017ல் மெரினாவில் தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது ஆட்சியில் மக்களும் தொண்டர்களும் விரும்புவர்களே அமர வேண்டும் என்றார்.

சசிகலாவை முதல்வராக்க அதிமுகவில் சிலர் முயற்சி செய்த அவ்வேளையில் தர்மயுத்தம் நடத்தி ஜெ. மரணத்தில் விசாரணை தேவை என்று ஓபிஎஸ் கூறியது அதிமுகவின் பிளவுக்குக் காரணமானது. சசிகலா சிறை சென்றுவிட அதிமுக ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி பிரிந்து கிடந்தது.

இரு அணிகள் இணைப்புக்கான முயற்சியின் போதெல்லாம் ஜெ மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்பதே ஓபிஎஸ்ஸின் வலியுறுத்தலாக இருந்தது.

2017 பிப்ரவரி கடைசியில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்து ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு கொடுத்தார். அதில் ஜெ மரணம் தொடர்பாக தங்களின் சந்தேகங்கள் எனக் கூறி ஓபிஎஸ் அணி ஒரு பெரிய பட்டியலையே இணைத்திருந்தது.

பின்னர் மார்ச் மாதம், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது ஒருமுறை கூட தன்னை ஜெயலலிதாவை சந்திக்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை என்றொரு குண்டைப் போட்டார். ஜெயலலிதா மறைவுச் செய்தி தாமதமாக வெளியிடப்பட்டதாக சர்ச்சையைக் கிளப்பினார். ஜெயலலிதா மர்ம மரணத்தில் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி என்றார்.

இத்தனையும் சொல்லிய அவர், அணிகள் இணைந்த போது எனக்கு தனிப்பட்ட முறையில் அம்மா மறைவில் சந்தேகம் இல்லை. மக்கள் எழுப்பிய சந்தேகங்களை தான் நான் எழுப்பினேன் என்றார் ஓபிஎஸ். இந்நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் மீண்டும் விஜயபாஸ்கரை கோர்த்துவிட்டு எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.

அன்று 20% தான் கூறியிருக்கிறேன் என்று ஜெ. மரணம் பற்றி பேசியவர் இன்று எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியிருப்பது பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தொடங்கிவைத்த விசாரணை சர்ச்சை அவரையே இறுக்கத் தொடங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: உங்க கூட்டணியை பயப்படாம இருக்க சொல்லுங்க.. பிரதமருக்கு உதயநிதி பதிலடி!
Udhayanidhi Stalin: உங்க கூட்டணியை பயப்படாம இருக்க சொல்லுங்க.. பிரதமருக்கு உதயநிதி பதிலடி!
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
Embed widget