மேலும் அறிய

OPS Letter: "இரட்டை இலை சின்ன விவகாரம்" தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். பரபரப்பு கடிதம்

இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். படிவம் ஏ மற்றும் படிவம் பி யில் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும். 2025 டிசம்பர் வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தொடர தனக்கு தகுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்:

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “ பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முதன்மை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி மற்றும் சட்டப்பூர்வப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையில், 28/6/20222 அன்று, கே.பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பினார். தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில், திருத்தப்பட்ட துணைச் சட்டங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கே. பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி 11/7/2022 இல் சட்டவிரோத பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பல்வேறு சட்ட விரோத தீர்மானங்களை நிறைவேற்றி அதன் விளைவாக அவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சிவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளன.  அந்தத் தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தால் இன்று வரை இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது வரை தேர்தல் ஆணையத்தாலோ சிவில் நீதிமன்றத்தாலோ எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

ஏ மற்றும் பி படிவம்:

தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின்  அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி ஒருங்கிணைப்பாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும், பழனிசாமியும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே, 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எங்களின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், இரட்டை இலை சின்னம் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

எனவே தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக தலையிட்டு, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில் திறம்பட பங்கேற்கும் வகையில், நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அனுமதியளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget