எந்த பைத்தியக்காரன் சொன்னான்? பிரான்சில் வழி சொல்லல; எங்கேயும் போக மாட்டேன் – வரிந்துகட்டி வசை பாடிய சீமான்!
இந்தி படிப்பதற்கான கட்டாயம் இருக்கு என்றால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான அவசியம் என்ன இருக்கிறது?

இந்திய மொழி இந்தி என எந்த பைத்தியக்காரன் சொன்னான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் “இந்தி படிப்பதற்கான கட்டாயம் இருக்கு என்றால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? இந்தியாவில் இத்தனை மொழி இருக்கும்போது நான் ஏன் இந்தி மட்டும் ஏன் படிக்க வேண்டும்.
உங்களுக்கு எப்படி உங்கள் மொழியோ அதுபோல் எங்களுக்கு எங்கள் மொழி. இங்கு யாரும் இந்தி கற்காமல் இல்லை. அவசியப்படுமானால் இந்தி கற்றுக்கொள்வார்கள்.
இந்தி மொழி இந்திய மொழி என்று எந்த பைத்திக்காரன் சொன்னது. இந்த நாட்டின் பிரதமர் உலகம் முழுக்க சொல்லிக்கொண்டிருக்கிறார் இந்திய நாட்டின் தொன்மையான மொழி தமிழ் என்று.
இந்தி என்ற கற்பினமே ஆபத்தானது. அது தேவையற்றது. ஆங்கிலத்தை ஒரு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தி வருகிறோம். அவ்வளவு தான்.
பிரான்சில் போய் ஆங்கிலத்தில் பேச முடியுமா? நீங்கள் அனுபவிச்சிருக்கீங்களா? நான் அனுபவிச்சிருக்கேன். வழி சொல்லமட்டேனு சொல்லிட்டான்.
சில மாநிலங்களில் பேசுவதால் எல்லா மாநிலங்களிலும் திணிக்க நினைப்பது ரொம்ப தப்பு. விரும்பினால் கற்கிறோம்.
மும்மொழி கொள்கையில் ஏன் தமிழ், தெலுங்கு, மலையாளம் இல்லை. எந்த சாசனத்தில் இந்திய மொழி இந்தி என உள்ளது. இது ஒரு ஆபத்தானது. ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் ஆண்டதால் வந்து விட்டது. இந்தி விவகாரத்திற்கு திராவிட கட்சிகள் அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.
இந்திக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு ஊருக்கு வெளியேதான் இடம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆங்கிலம் லாங்குவேஜ்தான் நாலேஜ் கிடையாது என்பது யாரும் புரிந்து கொள்ளவில்லை.
பொழுது போக்கு தளத்தில் தலைவனை தேடுபவர்கள் என்னைத் தேடமாட்டார்கள். நாங்க எந்த சூழலில் இந்த இயக்கத்தை உருவாக்கினோம் என நீங்கள் பார்க்க வேண்டும். எங்களின் காயம் பெரிது. நமக்கான உரிமையை நாம் உருவாக்க, மற்ற இயக்கங்களோடு ஒப்பிட்டு, இப்போது இருக்கும் ஓட்டு சதவீதத்தை வைத்து பெரிய வியாபாரம் செய்யலாம்.
தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள்
நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.
நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும். திமுகவிலிருந்து என் கட்சியில் இணைகிறார்கள். நான் வெளிப்படையாக விழா நடத்தி சொல்ல வேண்டுமா?
வருண் IPS என்னை சீண்டியதால் தான் அவர் அங்கு உள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி போலீஸ் வேலையை தான் பார்க்க வேண்டும். கட்சிக்காரர் போல் பேசி வருகிறார். தேவையில்லாமல் சீண்டினால் வெறி தான் வரும்.
நான் திராவிடம் பேசாமல், பெரியார் பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நான் வந்திருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய, பெரிய அரசியல் கட்சி கூட்டணிகள் அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது” எனத் தெரிவித்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

