மேலும் அறிய

Northeast Monsoon: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

North East Monsoon in Tamil Nadu 2025 : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18க்குள் விலகும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழைப்பெய்யும் காலமான வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15-18-க்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18க்குள் விலகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

இயல்பை விட அதிகம்

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் இயல்பாக 33 செ.மீ. மழை பெய்ய வேண்டும்.இந்த ஆண்டும் அதனை ஒட்டிய அளவிலேயே மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை, இயல்பாக 45 செ.மீ. மழை கிடைக்க வேண்டிய நிலையில், இதுவரை 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது — இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம் எனவும் அமுதா தெரிவித்தார்.

காற்றின் திசை மாற்றம் – பருவமழை துவக்கத்திற்கு அறிகுறி

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் தற்போது மேற்கு திசை காற்று வீசுகிறது.அந்த காற்று விரைவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வீசத் துவங்கும் போது,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16–18க்குள் துவங்கும் வாய்ப்பு உறுதியாகும் என அவர் கூறினார்.

வழக்கமாக அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது.கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்திலேயே பருவமழை துவங்கியுள்ளதாகவும்,அதிகமான ஆண்டுகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளதாகவும்,இரண்டு ஆண்டுகளில் தான் குறைவான மழை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையம் கணித்துள்ளபடி,வட மாவட்டங்களில் இயல்பாகவும் அல்லது இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.தென் மாவட்டங்களில் இயல்பாக அல்லது சற்றே குறைவாக மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 92 நாட்கள் கொண்ட பருவமழை காலத்தில்
இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாகும்.ஆனால், இந்த ஆண்டில் இயல்பை விட அதிகமாக, அதிகபட்சம் 50 செ.மீ. வரை மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இந்த மாதம் முழுவதும் 17 செ.மீ. மழை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget