மேலும் அறிய

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!

மணப்பாடு கடற்கரை கிராமத்தில் போர்ச்சுகீசிய முறையில் கட்டப்பட்டுள்ள பாரம்பரியம் மிக்க பல தேவாலயங்கள், மற்றும் நினைவுச் சின்னங்கள் இங்கு உள்ளன.


‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
வடக்கில் சிற்றாறு ஒன்று கடலில் சேரும் கழிமுகத்தில் ஊர் தொடங்குகிறது. நீண்ட மணல் செறிந்த அகலமான கடற்கரை அதன் கிழக்கு எல்லை. இதன் ஒரு பகுதி படகுகள் நிறுத்தப்படுமிடமாகவும்,மீன்கள் வந்திறங்கும் தளமாக செயல்படுகிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி பாறையும் மணலுமான ஒரு சிறு குன்றாகும். இந்தக் குன்றின் வடபகுதி மணல் செறிந்த கடற்கரையாகவும், தென்பகுதி பாறைகள் மிகுந்த கடற்கரையாகவும் உள்ளது. தீபகற்ப முனையில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. பெரிய மணல் தேரிகள் ஊரின் தென்மேற்குப் பகுதியெங்கும் காணப்படுகின்றன. இத்தேரிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பனைமரங்களும், வேப்ப மரங்களும், சீமை ஒடை மரங்களுமே இந்நிலப் பகுதியில் பரவலாகக் காணப்படும் தாவரங்களாகும்.
 

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
 
மணலும் காற்றும் நிறைந்த இவ்வூரில், மணல் காற்றில் வீசும் போது ஒரு பாட்டிசைப்பது போல் உள்ளதால் இதற்கு மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
தூத்துக்குடியிலிருந்து, ஆத்தூர், திருச்செந்தூர், குலசேகரன்பட்டிணம் வழியாக, கன்னியாகுமரி வரை வளைந்து நெளிந்து ஏற்றமும் இறக்குமாக செல்லும் இரு வழிச் சாலைதான் மணப்பாடு செல்வதற்கான பிரதான வழியாகும்.
 
தொழில்களும், பொருளாதாரமும்
மணப்பாட்டின் பொருளாதாரம் கடலையும், பனையையும் சார்ந்துள்ளது. கட்டு மரங்கள், வள்ளங்கள் மூலம் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பனியிலிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. எஞ்சிய மீன்கள் காயவைத்துக் கருவாடாகவும் ஆக்கப்படுகின்றன. மீன் பிடிப்பது, வலைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றை மீனவர்கள் கவனிக்கின்றனர்.
 
கத்தோலிக்க கிறித்தவ மதமே இங்கு நிலவும் முக்கிய மதம். மணப்பாடு கடற்கரை கிராமத்தில் போர்ச்சுகீசிய முறையில் கட்டப்பட்டு உள்ள பாரம்பரியம் மிக்க பல தேவாலயங்கள், மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்த ஊரில் இருப்பதாலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாலும் இவ்வூர் “சின்ன ரோமாபுரி” என்று அழைக்கப்படுகிறது.

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
 
தீபகற்ப குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் உருவாக்கியது என்றும் நம்பப்படுகிறது. இவ்வாலயத்தில் கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு என்று நம்பப்படும் பொருள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கி.பி.1540 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர்களின் பாய்மர கப்பல் சூறாவளியில் சிக்கிய போது அதில் இருந்தவர்கள் செய்த ஜெபத்தால் பாதுகாப்பாக மணப்பாட்டில் கரை ஒதுங்கியதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போர்ச்சுகீசியர்கள் மணல் குன்றின் மீது 10 அடி உயர சிலுவை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
மேலைக் கட்டட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன. 

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
மணப்பாட்டில்  புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது. தீபகற்பத்தின் முனையில் இருக்கும் குகையில் புனித சவேரியார் தங்கி இருந்து உள்ளார். வெளியூர் மட்டுமல்ல உள்ளூர் மக்களும் இக்குகைக்கு வந்து ஆழ் தியானம் செய்கின்றனர். குகைக்குள் 20 அடி ஆழமான நன்னீர் ஊற்று உள்ளது. குகை அமைந்துள்ள பகுதி கடலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ளது.அப்படி இருந்தாலும் கூட குகைக்குள் அமைந்துள்ள கிணற்று நீர் நன்னீராக உள்ளது. இதனை புனித நீராக தலையில் தெளித்தும் கண்களில் ஒற்றி கொண்டும் வீடுகளுக்கு பாட்டில்களில் பிடித்து கொண்டும் செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
மணப்பாடு ஊரை சுற்றிலும் மூன்று பக்கமும் கடல், ஒருபக்கம் அமைதியாக கடல் மணல் மேடாக இருக்க, இன்னொரு புறம் ஆர்ப்பரிக்கும் கடலில் பாறைகளும் அமைந்து உள்ளது. கடலில் விளையாட ஆசை இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஏனெனில் ஆர்ப்பரிக்கும் கடல், திடீரென உருவாகும் இயற்கை மணல் திட்டுகள்.

‛என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...’ மனமெல்லாம் அலை வீசும் மணப்பாடு!
மணப்பாடு கடற்கரையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்தமர்ந்து ஓய்வெடுக்கும் பகுதியாக உள்ளது. மணப்பாடு வரும் சுற்றுலா பயணியர்களை கவரும் வகையொல் அலைச்சறுக்கு, படகு போட்டி, பாய்மரக்கப்பல், துடுப்பு படகு போட்டி நடத்த ஏற்ற இடமாக உள்ளது மணப்பாடு.
 பார்க்க பார்க்க, ரசிக்க ரசிக்க அலுக்காத கடற்கரை கிராமத்துக்கு வாங்க ரசிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா அறிவிப்பு!
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா அறிவிப்பு!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையான வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையான வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
Embed widget