மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கை...! தயாரான மாவட்ட நிர்வாகம்...

ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் மிகக் கனமழைக்கு பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிகக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விரிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

கனமழை எச்சரிக்கை

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

*மின்சார விபத்துக்களைத் தவிர்க்க: மழையின் போது மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் பகிர்மான பெட்டிகள் அருகே பொதுமக்கள் நிற்கக் கூடாது. காற்றுடன் கூடிய மழையின் போது மின்கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தரையில் கிடக்கும் கம்பிகளைத் தொட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

*பழைய கட்டிடங்கள்: மழைப்பொழிவு நீடிக்கும் நேரங்களில் பலவீனமான மற்றும் பழைய கட்டிடங்களின் அருகே தஞ்சம் அடைவதைத் தவிர்க்க வேண்டும். சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*கால்நடை பாதுகாப்பு: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை மின் கம்பங்கள் அல்லது மின்சார வயர்கள் செல்லும் பாதைகளில் கட்டி வைக்க வேண்டாம். மழையின் போது மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கால்நடைகளை பாதுகாப்பான கொட்டகைகளில் பராமரிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு: தானிய பாதுகாப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் இதர தானியங்களைப் பாதுகாப்பதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

"திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள் மழையில் நனையாமல் இருக்க தார்பாய் கொண்டு முறையாக மூடப்பட வேண்டும். ஈரப்பதம் அதிகரித்தால் தானியங்களின் தரம் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை உயரமான மற்றும் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்," என ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண்கள்

மழைக்கால அவசரத் தேவைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த மின்கசிவு புகார்கள் அல்லது தாழ்வான மின்கம்பங்கள் குறித்த விவரங்களை உடனடியாக பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்கலாம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 * தொலைபேசி எண்: 04364-222588

 * கட்டணமில்லா எண்: 04364-1077

மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை

மின்னோட்டத் தடை அல்லது மின் விபத்துக்கள் தொடர்பான புகார்களுக்கு அந்தந்தப் பகுதி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

* மயிலாடுதுறை பகுதி: 04364-252218 (கைபேசி: 9498482319)

* சீர்காழி பகுதி: 04364-279301 (கைபேசி: 9445854006)

நிர்வாகத்தின் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயாராக உள்ளது. நீர்நிலைகளின் கரைகளை கண்காணிப்பது, மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றுவது போன்ற பணிகளுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக பேரிடர் மேலாண்மை குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மழைநீர் சூழ வாய்ப்பிருந்தால் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நிவாரண முகாம்களுக்குச் செல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இயற்கைச் சீற்றத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசு வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றும் நாளையும் சென்னையில் கொட்டப்போகும் மழை... 24 வரை எங்கெல்லாம் மழை தொடரும்! லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்
இன்றும் நாளையும் சென்னையில் கொட்டப்போகும் மழை... 24 வரை எங்கெல்லாம் மழை தொடரும்! லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
நாய் வளர்ப்பவர்களே உஷார்! செப்டம்பருக்குள் உரிமம் பெறாவிட்டால் ரூ.2,000 அபராதம்!
நாய் வளர்ப்பவர்களே உஷார்! செப்டம்பருக்குள் உரிமம் பெறாவிட்டால் ரூ.2,000 அபராதம்!
இனி கரண்ட் பில் கவலை இல்லை! 1000 வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்.. புதுச்சேரி மின்சாரத் துறையின் அதிரடி பசுமைத் திட்டம்!
இனி கரண்ட் பில் கவலை இல்லை! 1000 வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்.. புதுச்சேரி மின்சாரத் துறையின் அதிரடி பசுமைத் திட்டம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
Upcoming Hybrid SUVs Diwali: தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
தீபாவளிக்கு டபுள் தமாகா.! வெளியாகும் கியா சொரெண்டோ, ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் SUV-க்கள்; முழு விவரம்
US Iran War: 7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
Embed widget