மேலும் அறிய

கரூர்: கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வறட்சியின் பிடியில் இருக்கும் ஏரி, குளங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின் போது, காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கரூர் வழியாக சென்றபோதும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி முழுமையாக வீணாகி கடலில் கலந்து வருகிறது.

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் இருபுறமும் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. தமிழகத்தில், 3வது பெரிய ஏரியாக கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சபட்டி ஏரி, 1.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க கூடிய, 1,170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதுபோல, 300 ஏக்கர் பரப்பளவில் சின்ன தாராபுரம் அருகே தாதம்பாளையம் ஏரி, 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளியணை குளம், 200 ஏக்கர் பரப்பளவில் உடையாபட்டி குளம், 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாவத்தூர் குளம் உட்பட, 25க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின் போது, காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கரூர் வழியாக சென்றபோதும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி முழுமையாக வீணாகி கடலில் கலந்து வருகிறது.


கரூர்: கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வறட்சியின் பிடியில் இருக்கும் ஏரி, குளங்கள்

தொலை நோக்கு பார்வையுடன் ஏரி மற்றும் குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, கிடைக்கும் தண்ணீரை சேமித்து நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த அரசும் கவனம் செலுத்துவதில்லை. இயற்கை நமக்கு தண்ணீர் கொடுத்த போதும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் கரூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருந்து வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை காரணமாக, காவிரி ஆற்றில், 1.67 லட்சம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் என இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்டம் வழியாக கரைபுரண்டு ஓடிய போதும், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து, 27 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும், 10 க்கும் மேற்பட்ட பெரிய ஏரி மற்றும் குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன.



கரூர்: கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வறட்சியின் பிடியில் இருக்கும் ஏரி, குளங்கள்

அரசின் தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரே காரணத்தால் கரூர் மாவட்டம் வறட்சியின் கோரப் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து பெரிய நீர் தேக்க தொட்டி அமைத்து, 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, அங்கிருந்து வெள்ளியணை குளத்திற்கு கொண்டு சென்றால் போதும், அங்கிருந்து அதைச் சுற்றியுள்ள, 10 க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் வழியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்று, குளங்களை இணைத்து விட்டால் வறட்சி மாவட்டமாக இருந்து வரும் கரூர் மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக உருவெடுக்கும்.


கரூர்: கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - வறட்சியின் பிடியில் இருக்கும் ஏரி, குளங்கள்

மாவட்டத்திலுள்ள இரண்டு பெரிய ஏரிகள், 10க்கும் மேற்பட்ட குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு அரசு உயிர் கொடுக்கும் பட்சத்தில், கரூர் மாவட்டம் முழுவதும் வறட்சியின் பிடியிலிருந்து மீட்டு, ஒரு லட்சம் ஏக்கர் விலை நிலம் பயன்பெறும். இத்திட்டத்திற்கு, 150 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது, காவிரி ஆற்றில் ஏரிக்கு நீர் கொண்டு செல்ல ஆய்வுப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகின்றன. இனியாவது சிறப்பு கவனம் கொண்டு ஏரி மற்றும் குளங்களை இணைக்கும் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder | மாமன் மச்சான் தகராறுஜாமினில் வந்த மச்சான் வெட்டி கொன்ற மர்மநபர்கள்Senthil Balaji Warning: ’’வேலுமணியுடன் கூட்டு!’’நிர்வாகிகளுக்கு வார்னிங்BEAST MODE-ல் செந்தில் பாலாஜிRahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Embed widget