மேலும் அறிய

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

விடுதிக்கு சென்ற கௌசல்யா, விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் 2 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவருக்கு 24 வயது ஆகிறது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி பயிற்சி பெற்று வந்திருக்கிறார். கன்னியாஸ்திரி பயிற்சி சில மாதங்களுக்கு முன்பு முடிந்திருக்கிறது. அதனை முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பி.எஸ்சி., கணித பாடம் எடுத்து படித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, அது வீட்டிற்கு அருகில் இருப்பதால் அங்கேயே சேர்ந்து கணித படிப்பை தொடர்ந்து வந்தார். மூன்று ஆண்டுகள் உள்ள இந்த படிப்பில், முதலாமாண்டுதான் படித்துவந்தார் கௌசல்யா. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார் கௌசல்யா.

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

விடுதிக்கு சென்ற கௌசல்யா அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை  பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சென்று அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார். பின்னர் விடுதிக்குச் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நேற்றுமுன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடிவந்தனர். 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் போதிய வெளிச்சமின்மை காரணமாக கௌசல்யாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினரும் தேடும் பணியை நிறுத்தினர். 

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

தேடும் பணியை நிறுத்திவிட்டு ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் வியாழன் அன்று காலை கௌசல்யாவின் உடல் கிணற்றில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்த கௌசல்யாவின் உடலை கைப்பற்றினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரியான கௌசல்யாவின் மரணம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Embed widget