மேலும் அறிய

Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

”அரசியலில் எம்.ஜி.ஆர் பாணியை கையாளலாம் என்று நினைத்திருந்த ரஜினி, அது முடியாமல் போக, இப்போது திரைத்துறையில் அவர் பாணியை கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார்”

அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, அதற்கு குழுக்குப் போட்டுவிட்டு திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொடர்ந்து வருகிறார். அதிகமாக  ஆக்‌ஷன் பிளாக் திரைப்படங்களையே தேர்வு செய்து நடித்து வந்த ரஜினி, சமீப காலமாக ஆக்‌ஷனோடு சேர்த்து சமூக நோக்கம் கொண்ட கதைகளை தேர்வு செய்வதை தன்னுடைய பாணியாக மாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் அப்படியானதுதான்.

என்கவுண்டர் வேண்டாம்

சமீபத்தில் ரஜினி நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் அப்படியானதுதான். ஆக்‌ஷனும் இருக்கனும், சமூக நோக்கமும் இருக்கனும் என்ற ரஜினியின் வலியுறுத்தலை ஏற்று இயக்குநர் ஞானவேல் எழுதிய கதை அது.  காவல்துறையினர் செய்யும் என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையில் அந்த என்கவுண்டர் முறை எவ்வளவு மோசமானது என்பதை தன்னுடைய பாணியில் மக்களுக்கு உணர்த்தியிருப்பார் இயக்குநர் ஞானவேல். இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இதுபோன்ற சமூக நோக்கம், மக்களுக்கான மெசெஜ் சொல்லும் கதையாகவும் அதே நேரத்தில் தனக்கு ஒத்துப்போகும் ஆக்‌ஷன் பிளாக்கையும் சேர்த்து தயாரித்து வரப்படும் கதைகளுக்கு இனி முக்கியத்துவம் கொடுத்து ரஜினி கேட்க முடிவு செய்திருக்கிறார். 

“இன்னொரு கதை பண்ணுங்க” சொன்ன ரஜினி

அதே நேரத்தில், ரஜினியின் காலா, கபாலி, அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களை காட்டிலும் அவருக்கு ஜெயிலரும், வேட்டையனும் கைக்கொடுத்த நிலையில், மீண்டும் தனக்கு ஒரு கதை பண்ணுமாறு இயக்குநர் வேட்டையன் திரைப்பத்தை இயக்கிய, இயக்குநர் டி.ஜே.ஞானவேலிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ரஜினி. இதனால், ரஜினிக்கு இன்னொரு கதை செய்யும் பணியில் தீவிரவமாக இயக்குநர் ஞானவேல் ஈடுபட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் பாணியை கையெலெடுக்கும் ரஜினி

எம்.ஜி.ஆர் முழுமையாக தன்னை அரசியலுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்னர் அவர் நடித்த மக்கள் நலன் சார்ந்த, சமூகத்திற்கு ஏற்ற திரைப்படங்கள் போல இனி ரஜினியும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். தன்னால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தை தணித்துக்கொள்வதற்காக, எம்.ஜி.ஆர் பாணியில் பாட்டாளிகளில் ஒருவராக அவர்களுக்காக பேசும் நபராக வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ரஜினி புதிய ஆர்வம் கொண்டிருக்கிறார். அந்த வகையில்தால், சோஷியல் மெஜெஜோடு எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் மாதிரியான இன்னொரு கதையை தயார் செய்து தன்னிடம் வந்து காட்டுமாறு இயக்குநர் ஞானவேலுக்கு இன்னொரு அசைன்மெண்டை ரஜினி கொடுத்திருக்கிறார். 

ரஜினியிடம் வலியுறுத்திய சீமான்

சமீபத்தில் நடிகர் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ரஜினிக்கு இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறார். உங்களுக்கு அரசியல் சரிவராது. ஆனால், மக்களை அரசியல்படுத்தும் பணிகளை திரைத்துறை மூலம் நீங்கள் செய்யுங்கள் என சீமான் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினியும் நானும் அதே மைன்செட்டில்தான் இருக்கிறேன். நிச்சயமாக தற்போதைய அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து இனி நடிப்பேன் என்று சீமானிடம் ரஜினியும் உறுதி கொடுத்திருக்கிறார். 

ஞானவேலிடம் நேரடியாக சொன்ன ரஜினி, தன்னுடைய உதவியாளர்கள் மூலம் மற்ற இயக்குநர்களுக்கும், புது முகங்களும் இதுபோன்ற கதைகளை தயார் செய்து வந்தால் அதனை உடனடியாக கேட்க தான் தயார் என்ற மெசேஜும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.