மேலும் அறிய

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி. கரூரில் தடை இன்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்.

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்

அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரூரில் தடையின்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேபிள் ஆபரேட்டர்கள் முறையிட்டனர்.

 

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்;  முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

 

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க கரூர் மாவட்ட நிர்வாகிகள்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடந்த 30 வருடங்களாக அரசு கேபிள் ஆபரேட்டராக தொடர்பு பணியாற்றி வருகிறோம். கேபிள் தொழில் பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்து தற்போது தமிழக அரசு கேபிள் பாக்ஸை பயன்படுத்தி வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கரூர் மாவட்ட கௌரவ தலைவர் பாக்கி தங்கராஜ், “தமிழக அரசுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். இருந்த போதும் கடந்த மூன்று நாட்களாக கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முழுவதும் செயல்படாமல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைபேசியிலும், நேரிலும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என கேட்டு வருகின்றனர்.


கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்;  முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்


இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டால் 24 மணி நேரத்தில் சரியாகிவிடும் என பதில் தெரிவித்தனர். ஆனால் மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். முறையாக கேபிள் கட்டணம் செலுத்துபவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில்  இருப்பவர்கள் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் பார்க்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 

 


கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்;  முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

எனவே தற்போது டிஜிட்டல் முறையில் உள்ள செட் ஆப் பாக்ஸ்களை வழங்க வேண்டும். மேலும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து வரும் சிக்னலை தனியார் மென்பொருள் நிறுவனம் முன்னறிவிப்பின்றி தடை செய்துள்ளது. இது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு அரசு கேபிள் வழக்கம் போல் இயங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர், “கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் டிவி தொழில் செய்து வருகிறோம். கடந்த 2011 முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைப்புகளை வழங்கி வருகிறோம். 2017 முதல் செட்டாப் பாக்ஸ் பொருத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் சிக்னல் தடைபட்டுள்ளது. இதுவரை சரி செய்யாமல் அரசு கேபிள் டிவி நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. 

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் தனியார் கேபிள் டிவி, டிடிஹச் முறைக்கு சந்தாதாரர்கள் மாறி வருவதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget