மேலும் அறிய

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி. கரூரில் தடை இன்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்.

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்

அரசு கேபிள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கேபிள் ஆபரேட்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரூரில் தடையின்றி அரசு கேபிள் இயங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேபிள் ஆபரேட்டர்கள் முறையிட்டனர்.

 

கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

 

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க கரூர் மாவட்ட நிர்வாகிகள்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடந்த 30 வருடங்களாக அரசு கேபிள் ஆபரேட்டராக தொடர்பு பணியாற்றி வருகிறோம். கேபிள் தொழில் பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்து தற்போது தமிழக அரசு கேபிள் பாக்ஸை பயன்படுத்தி வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கரூர் மாவட்ட கௌரவ தலைவர் பாக்கி தங்கராஜ், “தமிழக அரசுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். இருந்த போதும் கடந்த மூன்று நாட்களாக கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முழுவதும் செயல்படாமல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைபேசியிலும், நேரிலும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என கேட்டு வருகின்றனர்.


கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்


இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டால் 24 மணி நேரத்தில் சரியாகிவிடும் என பதில் தெரிவித்தனர். ஆனால் மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். முறையாக கேபிள் கட்டணம் செலுத்துபவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில்  இருப்பவர்கள் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் பார்க்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 

 


கரூரில் அரசு கேபிள் நிறுத்தம்; முதல்வர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் - கேபிள் ஆபரேட்டர்கள்

எனவே தற்போது டிஜிட்டல் முறையில் உள்ள செட் ஆப் பாக்ஸ்களை வழங்க வேண்டும். மேலும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து வரும் சிக்னலை தனியார் மென்பொருள் நிறுவனம் முன்னறிவிப்பின்றி தடை செய்துள்ளது. இது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு அரசு கேபிள் வழக்கம் போல் இயங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர், “கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் டிவி தொழில் செய்து வருகிறோம். கடந்த 2011 முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைப்புகளை வழங்கி வருகிறோம். 2017 முதல் செட்டாப் பாக்ஸ் பொருத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் சிக்னல் தடைபட்டுள்ளது. இதுவரை சரி செய்யாமல் அரசு கேபிள் டிவி நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. 

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் தனியார் கேபிள் டிவி, டிடிஹச் முறைக்கு சந்தாதாரர்கள் மாறி வருவதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget