மேலும் அறிய

”கொள்முதலுக்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை” - திருவாரூர் எம்.எல்.ஏ அறிவிப்பு

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பைசாகூட வாங்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு யாரும் பணம் தர வேண்டாம். அப்படி அதிகாரிகள் பணம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவியுங்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சென்று மருத்துவமனைகளில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேட்டறிந்தார் அதன்பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 22 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் பரிசோதனைக்கு வருபவர்களில் 30 சதவீதத்திற்கு மேல் நோயாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில் இன்று அது படிப்படியாக குறைந்து 16 முதல் 17 சதவீதம் என்ற அளவுக்கு சரி பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாகும்.
 
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமித்து அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் வேறு ஒரு மாவட்ட அமைச்சரை நியமிக்க களத்தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளார். அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
 
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு 16 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1782 கிலோ மீட்டர் தூரம் வடிகால் வாய்க்கால், பாசன வாய்க்கால் மற்றும் ஆறுகளை தூர்வாரும் பணிகள் தற்போது துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன், ”திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு 40 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகினர். 
”கொள்முதலுக்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை” - திருவாரூர் எம்.எல்.ஏ அறிவிப்பு
 
இதனை கருத்தில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பைசாகூட வாங்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதை திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு யாரும் பணம் தர வேண்டாம். அப்படி அதிகாரிகள் பணம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவியுங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எனவும், மேலும் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்கிற விதி அமலில் இருக்கும் போதிலும் கடந்த ஆட்சி காலத்தில் வெளி மாவட்ட தனியார் வியாபாரிகளின் நெல் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு அதிகாரிகளும் துறை அமைச்சரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது காவல்துறை உதவியோடு வெளி மாவட்ட நெல் ஒரு மூட்டை கூட கொண்டுவந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது! செங்கல்பட்டு மக்களே உஷார்!
நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது! செங்கல்பட்டு மக்களே உஷார்!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
சேலம் தெற்கில் வீடு தேடி வரும் புதிய திட்டம்.. எதிர்பார்ப்பில் மக்கள்.. தவெகவின் ஆஃபர்!
சேலம் தெற்கில் வீடு தேடி வரும் புதிய திட்டம்.. எதிர்பார்ப்பில் மக்கள்.. தவெகவின் ஆஃபர்!
CM Vijay: விஜய்க்கு ஜோதிடம் மீது துளிகூட நம்பிக்கை இல்ல.. ஓபனாக போட்டுடைத்த பண்டிட் வெற்றிவேல்!
CM Vijay: விஜய்க்கு ஜோதிடம் மீது துளிகூட நம்பிக்கை இல்ல.. ஓபனாக போட்டுடைத்த பண்டிட் வெற்றிவேல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Embed widget