மேலும் அறிய

கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்துஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினசரி மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் ரூ 400 செலவு செய்து தெருநாய்களுக்கு உணவு அளித்து கருணை காட்டும் மீன் வியாபாரி. 

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்து
ஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு   மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரெங்கராஜ் (34). இவரது சொந்த ஊர் மதுரை. இவரது மனைவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வருகிறார். இதற்காக மதுரையில் வசித்து வந்த இவர்களது குடும்பம் கடந்த 2014ஆம் ஆண்டு திருவாரூரில் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த ஊரான மதுரையில் செய்த மீன் வியாபாரத்தை திருவாரூரில் செய்துவரும் ரெங்கராஜன் மதுரையில் செய்த கருணை பணியையும் திருவாரூரில் தொடங்கினார். மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் தினமும் ரூ.400  செலவு செய்து தெருநாய்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு அளிப்பது தான் அந்தப் பணி.


கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மதிய நேரத்தில் சாதம் மற்றும் முட்டை கலந்த உணவையும் மாலை நேரத்தில் ரொட்டியும் கொடுப்பார். இத்தகைய கருணை பணியை இடைவிடாது திருவாரூரில் செய்து வருகின்ற ரெங்கராஜன் தற்போது ஊரடங்கு காரணமாக தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். கடந்தாண்டு முழுமையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு மாத காலம் நாய்களுக்கு உணவளிப்பதை மட்டுமே தனது பணியை மேற்கொண்டார். இதற்கு இவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரெங்கராஜன் கூறிய போது மனிதர்கள் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்று விடுவார்கள் ஆனால் வீட்டு விலங்குகள் தனது தேவையை மனிதர்களை அனுசரித்து தான் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது அதிலும் குறிப்பாக நாய்கள் நன்றியுள்ளவை. அத்தகைய நாய்களில் தெருநாய்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. அவற்றுக்கு உணவு அளிப்பதில் நிம்மதி கிடைப்பதோடு நம்மால் பல ஜீவராசிகள் உணவு உண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதே எனக்கு முழு திருப்தியாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த பணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். இதற்காக தினசரி ரூ 400 செலவு செய்து வருகிறேன் என்றார்.

தான் சம்பாதித்த தனது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக்கூடிய காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை ஒதுக்கி அதற்காக செலவிடும் ரெங்கராஜன் போன்ற மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்த தான் வருகிறார்கள் என்பதற்கு ரெங்கராஜன் ஒரு எடுத்துக்காட்டு...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும்.. ஆனாலும் ஜெயிப்போம் - வேட்பாளர் சுந்தர் சி பேட்டி !
போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும்.. ஆனாலும் ஜெயிப்போம் - வேட்பாளர் சுந்தர் சி பேட்டி !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Embed widget