மேலும் அறிய

கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்துஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினசரி மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் ரூ 400 செலவு செய்து தெருநாய்களுக்கு உணவு அளித்து கருணை காட்டும் மீன் வியாபாரி. 

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்து
ஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு   மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரெங்கராஜ் (34). இவரது சொந்த ஊர் மதுரை. இவரது மனைவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வருகிறார். இதற்காக மதுரையில் வசித்து வந்த இவர்களது குடும்பம் கடந்த 2014ஆம் ஆண்டு திருவாரூரில் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த ஊரான மதுரையில் செய்த மீன் வியாபாரத்தை திருவாரூரில் செய்துவரும் ரெங்கராஜன் மதுரையில் செய்த கருணை பணியையும் திருவாரூரில் தொடங்கினார். மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் தினமும் ரூ.400  செலவு செய்து தெருநாய்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு அளிப்பது தான் அந்தப் பணி.


கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மதிய நேரத்தில் சாதம் மற்றும் முட்டை கலந்த உணவையும் மாலை நேரத்தில் ரொட்டியும் கொடுப்பார். இத்தகைய கருணை பணியை இடைவிடாது திருவாரூரில் செய்து வருகின்ற ரெங்கராஜன் தற்போது ஊரடங்கு காரணமாக தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். கடந்தாண்டு முழுமையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு மாத காலம் நாய்களுக்கு உணவளிப்பதை மட்டுமே தனது பணியை மேற்கொண்டார். இதற்கு இவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரெங்கராஜன் கூறிய போது மனிதர்கள் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்று விடுவார்கள் ஆனால் வீட்டு விலங்குகள் தனது தேவையை மனிதர்களை அனுசரித்து தான் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது அதிலும் குறிப்பாக நாய்கள் நன்றியுள்ளவை. அத்தகைய நாய்களில் தெருநாய்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. அவற்றுக்கு உணவு அளிப்பதில் நிம்மதி கிடைப்பதோடு நம்மால் பல ஜீவராசிகள் உணவு உண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதே எனக்கு முழு திருப்தியாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த பணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். இதற்காக தினசரி ரூ 400 செலவு செய்து வருகிறேன் என்றார்.

தான் சம்பாதித்த தனது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக்கூடிய காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை ஒதுக்கி அதற்காக செலவிடும் ரெங்கராஜன் போன்ற மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்த தான் வருகிறார்கள் என்பதற்கு ரெங்கராஜன் ஒரு எடுத்துக்காட்டு...

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget