மேலும் அறிய

கால்நடைகளுக்கு நோய் பரவுதலை தடுக்க பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிறிஸ்தவர்கள்

’’கிறிஸ்தவ தேவாலயத்தில், கால்நடைகள் அலங்கரித்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து. கால்நடைகளுக்கு ஜெபம் செய்து, தீர்த்தம் தெளித்து படையல் வழங்கினர்’’

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டை பாத்திமா நகர், கர்த்தானூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகள் சில மாதங்களுக்கு முன்பு கோமாரி, அம்மை நோய் மற்றும் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து கால்நடைகள் உயிரிழந்து வந்ததது. 
 
கால்நடைகளுக்கு நோய் பரவுதலை தடுக்க  பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிறிஸ்தவர்கள்
இந்நிலையில் கால்நடைகள் மர்ம நோயால் உயிரிழக்காமல் இருக்க பாத்திமா நகரில் உள்ள கார்மேல் அன்னை ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் கார்மேல் அன்னை ஆலய  பங்குதந்தை வினோத் லூயிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தில், கால்நடைகள் அலங்கரித்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து. கால்நடைகளுக்கு ஜெபம் செய்து, தீர்த்தம் தெளித்து படையல் வழங்கினர். இந்த பொங்கல் விழாவில் ஏராளமான கிறித்தவ மக்கள் கலந்து கொண்டனர். மேலும் பாத்திமா நகரில் உள்ள  கார்மேல் அன்னை ஆலயத்தில்   உள்ள ஏழை எளிய மக்களுக்கு   தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ்  கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். 

பூக்களின் விலை கடும்  வீழ்ச்சி - சாலையில் கொட்டப்பட்ட சம்பங்கி, பட்டன் ரோஸ் பூக்கள்

தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை கிழங்கு சாகுபடி செய்த ஆறு மாதத்தில் பூ பிடிக்க ஆரம்பிக்கிறது. இதில் ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தொடர்ந்து ஆண்டு முழுவதும் சீரான நிலையில் 40 முதல் 50 ரூபாய் வரை கிடைக்கிறது. இதனால் வழக்கமாக மார்கழி மாதத்தில் கோயில் விசேஷங்களுக்கும், தொடர்ந்து தை மாதத்தில் திருமண நிகழ்ச்சி களுக்கும் சம்பங்கி பூக்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. எனவே மார்கழி, தை மாதத்தில் மகசூல் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சம்பங்கி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
 

கால்நடைகளுக்கு நோய் பரவுதலை தடுக்க  பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிறிஸ்தவர்கள்
 
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோயிலில் வழிபட அரசு தடை விதித்துள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக சம்பங்கி பூக்களின் விலை குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்து வரும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால், சாலையோரம் பூக்களை கொட்டிவிட்டுச் செல்கின்றனர். தருமபுரி அடுத்த சோகத்தூர் அருகே சுமார் 5 டன் அளவில் சம்பங்கி மற்றும் பட்டன் ரோஸ் பூக்களை விவசாயிகள் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு செல்கின்றனர். தற்போது கோயில்களில் வழிபட தடை வித்திருப்பதால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.