மேலும் அறிய

தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!

அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுப்பது பற்றி பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்  திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். உடனே அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமலே இருந்தது.

அவருக்கு அமைச்சரவையில் எப்போது இடம் வழங்கப்படும்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சரான உதயநிதி

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை உள்ளிட்ட பல திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இதுகுறித்துக் கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ’’கோரிக்கை வலுத்திருக்கிறது. இன்னும் பழுக்கவில்லை’’ என்று கூறி இருந்தார். 

நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை உண்டாகும்

தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரவு மட்டுமே இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Embed widget