மேலும் அறிய

Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!

இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது தீவிரமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது தீவிரமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயலானது டெல்டா மற்றும் வட இலங்கை கடற்கரை பகுதிகளை நெருங்கு பின்னர் அப்படியே தமிழகத்தின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவின்படி, “டித்வா புயல் நவம்பர் 29ம் தேதி அதிகாலை அப்டேட்டின்படி, புயலின் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. இது கடலோர பைபாஸ் ரைடராக தமிழக கடற்கரைக்கு இணையாக நகரும். டெல்டா பகுதியில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை தொடங்கியுள்ளது. நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி வரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது, மேலும் காலை 8.30 மணிக்குள் 150-175 மி.மீ. தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

மழை மெதுவாக கடலூர் அருகே, பின்னர் புதுச்சேரிக்கு நகர்ந்து அடுத்ததாக மாறி, பின்னர் இரவில் சென்னைக்கு மாறும். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறந்த நாளாக இருக்கும். நேற்று காற்று வீசுவதைக் கண்டு, டெல்டா அருகே வானிலை சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் டிட்வா புயலானது நவம்பர் 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வரும்” என தெரிவித்துள்ளார். 

சென்னையில் மழை

இதனிடையே சென்னையில் அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியுள்ளது. வானம் கருமேகங்கள் சூழ இருட்டியுள்ளதால் இது காலை நேரமா, மாலை நேரமா என்ற குழப்பம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. முன்னதாக சென்னைக்கு டிட்வா புயல் காரணமாக நவம்பர் 29ம் தேதி மாலை முதல் படிப்படியாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் மழையின் அளவை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அதிகனமழை கொட்ட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும், பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. எமர்ஜென்ஸி விளக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து வைக்கவும், தாழ்வான இடங்களில் இருக்கும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்லவும் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
4G,5G காலத்திலும் அசத்தும் '3G' பாரம்பரியக் கலை: சென்னை மாணவர்களை ஈர்த்த புதுச்சேரி டெரக்கோட்டா!
4G,5G காலத்திலும் அசத்தும் '3G' பாரம்பரியக் கலை: சென்னை மாணவர்களை ஈர்த்த புதுச்சேரி டெரக்கோட்டா!
கனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ் அதிரடி
கனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ் அதிரடி

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget