மேலும் அறிய

Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!

இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது தீவிரமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது தீவிரமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயலானது டெல்டா மற்றும் வட இலங்கை கடற்கரை பகுதிகளை நெருங்கு பின்னர் அப்படியே தமிழகத்தின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவின்படி, “டித்வா புயல் நவம்பர் 29ம் தேதி அதிகாலை அப்டேட்டின்படி, புயலின் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. இது கடலோர பைபாஸ் ரைடராக தமிழக கடற்கரைக்கு இணையாக நகரும். டெல்டா பகுதியில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை தொடங்கியுள்ளது. நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி வரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது, மேலும் காலை 8.30 மணிக்குள் 150-175 மி.மீ. தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

மழை மெதுவாக கடலூர் அருகே, பின்னர் புதுச்சேரிக்கு நகர்ந்து அடுத்ததாக மாறி, பின்னர் இரவில் சென்னைக்கு மாறும். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறந்த நாளாக இருக்கும். நேற்று காற்று வீசுவதைக் கண்டு, டெல்டா அருகே வானிலை சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் டிட்வா புயலானது நவம்பர் 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வரும்” என தெரிவித்துள்ளார். 

சென்னையில் மழை

இதனிடையே சென்னையில் அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியுள்ளது. வானம் கருமேகங்கள் சூழ இருட்டியுள்ளதால் இது காலை நேரமா, மாலை நேரமா என்ற குழப்பம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. முன்னதாக சென்னைக்கு டிட்வா புயல் காரணமாக நவம்பர் 29ம் தேதி மாலை முதல் படிப்படியாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் மழையின் அளவை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அதிகனமழை கொட்ட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும், பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. எமர்ஜென்ஸி விளக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து வைக்கவும், தாழ்வான இடங்களில் இருக்கும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்லவும் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
Embed widget