மேலும் அறிய

பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

கரூரில் பாசன வாய்க்காலை தடுத்து அரசின் இடம் அனுமதி பெறாமல் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம்.

கரூரில் பாசன வாய்க்காலை தடுத்து அரசின் இடம் அனுமதி பெறாமல் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைய மேலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

 

 

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

கரூர் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் தேவை என உணர்ந்து தேர்தல் வாக்குறுதிகளில் அதிமுக, திமுக என தவறாமல் புதிய பேருந்து நிலையம் அமையும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அப்படி கடந்த 30 ஆண்டுகளாக மாறி மாறி பேருந்து நிலையம் இதோ வந்துவிடும் அதோ வந்துவிடும் என நினைத்து ஏங்கி இருந்த மாவட்ட மக்களுக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோடங்கிபட்டி என்ற இடத்தில் பேருந்து அமையும் அதற்கான பூமி பூஜையை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கி வைத்தார். பணிகள் துவங்குவதற்குள் தேர்தல் வந்துவிட்டது. ஆகவே அந்த புதிய பேருந்து நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் நேரத்திலும் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமையும் என வாக்குறுதி அளித்தனர். இது சம்பந்தமாக பேருந்து நிலையத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் வேட்பாளர் பிரச்சார பிரச்சாரத்திலும் முன்னாள் முதலமைச்சர்களும் இந்நாள் முதலமைச்சரும் வாக்குறுதியை வாரி வீசினர்.

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

அதன்படி, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது. அப்போது மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. 48 வார்டுகள் கொண்ட மாநகராட்சியை அதிக எண்ணிக்கையில் திமுக கைப்பற்றியதால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் முயற்சியால் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் உருவாக்கப்படும் எனவும் அந்த பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி பூமி பூஜை பணிகளும் நடைபெற்று இன்றுவரை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கரூர் மாவட்டம் திருமாநிலையூர் கிராமத்தில் பாசன வாய்க்கால் மற்றும் விலை நிலங்களை தடுத்து கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருகிறது. அதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் ராஜ் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா நாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் மாநில அரசிடம் அனுமதி பெறாமல் நீர் வழித்தடங்கள் விலை நிலங்களை சீரமைத்து கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருவது கூட்டுக்குழு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. உரிய அனுமதியின்றி விலை நிலங்களில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஏற்படும் சேதங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட வேண்டும் மாநில அரசிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்பது தெரிந்தும் ஒப்புதல் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும்.

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

அபராத தொகையை பசுமை பரப்பை அதிகப்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும். அரசியலிலிருந்து தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை பஸ் நிலைய கட்டுமான பணிகள்  நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கோடங்கிபட்டிகளும் திமுக ஆட்சி காலத்தில் திருமாநிலையூரிலும் பேருந்து நிலையம் வந்துவிடும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கும் பேருந்து நிலையம் இங்கேதான் வருகிறது. எதிர்பார்த்த பொதுமக்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

பேருந்து நிலையம் அமையும் இடத்தில் இது போன்ற குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில் ஏன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களது பணியை மெத்தனமாக செயல்படுகிறார்கள் என சில சமூக ஆர்வலர்களும் மன வேதனை உடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget