மேலும் அறிய

Villupuram | விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ குறைகிறது தினசரி பாதிப்பு எண்ணிக்கை

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உச்சத்தில்‌ இருந்த கொரோனா தினசரி பாதிப்பு பொது முடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறைந்து வருகிறது.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உச்சத்தில்‌ இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, பொது முடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறைந்து வருகிறது.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 36,234 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 30819 போ்‌ குணமடைந்தனர்‌. 262 போ்‌ உயிரிழந்தனர்‌. இரண்டாவது அலையைப்‌ பொருத்தமட்டில்‌, மே 11-ஆம்‌ தேதி எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில்‌ 533 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இது பரிசோதனை செய்தவர்களின்‌ எண்ணிக்கையில்‌ 18.40 சதவீதம்‌. இந்த தினசரி பாதிப்பு விகிதம்‌ மே 20-இல்‌ 22.61, மே 22-இல்‌ 23.10,மே 23-இல்‌ 23.90 என உயர்ந்தது. உச்சபட்சமாக மே 24-இல்‌ பாதிக்கப்பட்டோர்‌ சதவீதம்‌ 27.62 ஆக அதிகரித்தது. அன்று பரிசோதனை செய்யப்பட்ட 1452 பேரில்‌, 401 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறையத்‌ தொடங்கியது. மே 26-இல்‌ பரிசோதனை செய்யப்பட்ட 3746 பேரில்‌ 736 பேருக்கு மட்டும்‌ தொற்று உறுதியானது. இதன்‌மூலம்‌ பாதிப்பு 19.65 சதவீதமாகக்‌ குறைந்தது. மே 29-இல்‌ 17.20, மே 30-இல்‌ 14.06 சதவீதம்‌ என பாதிப்பு இறங்குமுகமாக இருந்தது, இந்தநிலையில் இன்று(3-06-2021)  557 நபருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டது 3 பேர் இறந்துள்ளனர். இதேநிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ குறைந்து, பாதிப்பு வெகுவாகக்‌ குறைய வாய்ப்புள்ளது. 


Villupuram | விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ குறைகிறது தினசரி பாதிப்பு எண்ணிக்கை
இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌ துறையினர்‌ தெரிவித்தனர்‌. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன . மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன . மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு அந்த பகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


Villupuram | விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ குறைகிறது தினசரி பாதிப்பு எண்ணிக்கை
அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 18 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 105 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கிருமி நாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்யப்பட்டதோடு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு இருக்கவும் அப்பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவைான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.


Villupuram | விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ குறைகிறது தினசரி பாதிப்பு எண்ணிக்கை

இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. ஆக்சிஜன் படுக்கைகள் இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 460 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 360 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 80 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளது. இந்த படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. இதில், 18,000 முதல் 19,000 லிட்டர் மட்டுமே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மேலும், இங்கு புதியதாக கட்டப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
US Iran War Fuel Crisis: கடும் எரிபொருள் தட்டுப்பாடு; ‘Work from Home‘ உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு; எங்கெங்க தெரியுமா.?
கடும் எரிபொருள் தட்டுப்பாடு; ‘Work from Home‘ உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு; எங்கெங்க தெரியுமா.?
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Embed widget